சிவகங்கை, ஜூலை11- சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி திட்டத்தில் உருவாக்கப்பட்ட கிணறு களுக்கு மின்சார இணைப்பு வேண்டுமென 40 விவசாயிகள் ஆட்சியர் ஜெயகாந்தனி டம் மனு அளித்துள்ளனர். 2016-17ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் சிவகங்கை மாவட் டத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் விவ சாயக் கிணறு வெட்டினார்கள். ஆதிதிரா விடர், பிற்பட்டோருக்கு ரூ. 8 லட்சம் மானி யம் வழங்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட கிணற்றில் போதுமான தண்ணீர் இருந்தும் மின் இணைப்பு வழங்காததால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை. தண்ணீர் மிகுந்த ஆழத்தில் உள்ளதால் ஆயில் மோட்டார் பயன்படுத்த முடியவில்லை. இது குறித்து ராஜகம்பீரம் விவசாயி காசிராஜன் கூறும்போது, எனக்கு வைகை கரையில் நிலங்கள் உள்ளன.விவசாயத் திற்கு தண்ணீர் கிடையாது. மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் உத வியோடு கிணறு வெட்டினேன். கிணற்றில் தண்ணீர் உள்ளது.
மின் இணைப்பு இல்லா ததால் தண்ணீரை பயன்படுத்த முடிய வில்லை. இந்தத் திட்டத்திற்கு மின் இணை ப்பு முன்னுரிமையில் வழங்குவதாக மாவட்ட நிர்வாகத்தால் உறுதியளித்தது என்றார். இவர்மட்டுமல்ல சுக்கானூரணி சவரி நாதன், ராஜகம்பீரம் காசிராஜன், பச்சேரி முத்துச்சாமி, இடைக்காட்டுர் அய்யப்பன், மிக்கேல் பட்டினம் பீட்டர், தூதை சங்கீதா, கீழடி ரஹமத்துல்லா, அய்யம்மாள், சொட்ட தட்டி கிருஷ்ணன், பிரமனூர் இந்திரா, கழு கேர்கடை சலீம், ஆறுமுகம், வெள்ளூர் கணேசன், கணக்கண்குடி தனலெட்சுமி ஆகி யோர் உள்ளிட்ட 40 விவசாயிள் பிரதம மந்திரி திட்டத்தில் கிணறு வெட்யுள்ளனர். இவர்களுக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை. இது குறித்து விவசாயிகள் குறைதீர் நாளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் ஆறுமுகம், ராஜகம்பீரம் சி. ராஜன், பச்சேரி முத்துச்சாமி, இடைக்காட் டூர் அய்யப்பன் ஆகியோர் மாவட்ட ஆட்சி யர் அவர்களை சந்தித்து மனு கொடுத்துள்ள னர். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி கொடுத்துள்ளார்.