tamilnadu

img

பி.ஜி.ஆர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர், செப்.5-  பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் இயங்கி வந்த பி.ஜி.ஆர் என்ற தனியார் நிறுவனம் சட்ட விரோதமாக கதவடைப்பு செய்துள்ளது. இதனால்  127 தொழிலாள ர்களின் குடும்பங்கள் பட்டினி யால் வாடுகின்றன.  இவர்கள் 54 நாட்களாக தங்களின் கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.  பொன்னேரி ஆர்.டி.ஒ பேச்சுவார்த்தை நடத்தியும்,  பி.ஜி.ஆர் நிர்வாகம் செவிசாய்க்க வில்லை.  எனவே மாநில அரசு தலையிட்டு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பி.ஜி.ஆர் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தச்சூர்கூட்டுச்சாலையில்  வியாழனன்று (செப். 5)  தொடர் முழக்கப் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தி ற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராய ணன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர்  ஜி.சுகுமாறன், மாவட்டத் தலைவர் கே. விஜயன், செயலாளர் கே. ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கலாம், துணை  நிர்வாகிகள் ஜி.விநாயக மூர்த்தி, எஸ். எம்.அனீப், பி.கதிர்வேல், அர்ஜூணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ். சங்கர், மாநில நிர்வாகி ஜி.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.