tamilnadu

img

சுற்றுச்சூழல் மாசுபாடு, அலைக்கழிப்பு பிரச்சனைகள் திருப்பூர் ஆட்சியரகத்தில் மக்கள் மனு அளிப்பு

திருப்பூர், ஜூலை 22 – திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புகள் அருகே தொழிற் சாலைகளால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளைக் களையவும், அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும் பல்வேறு பகு திகளைச் சேர்ந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்க்கூட்டத்தில் மனு அளித்தனர். திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம் வருவாய் அலுவ லர் சுகுமார் தலைமையில் திங்க ளன்று நடைபெற்றது.

மாசுபாடு பிரச்சனைகள்
இதில், அவிநாசி ஒன்றியம் கூட்டப்பள்ளி பகுதி மக்கள் அளித்த மனுவில், சேவூரில் இருந்து நம்பி யூர் செல்லும் வழியில் கூட்டப் பள்ளி கிராமம் உள்ளது. இங்கு, 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள் ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பாக மெயின் ரோட்டில் பனியன் நிறு வனத்தின் டையிங் கழிவுகள் இரவு நேரத்தில் கொட்டப்பட்டது. இதனால், இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியை கடந்து செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, உடனடியாக கழிவுகளை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதேபோல் திருப்பூர் கூலிப் பாளையம் நால்ரோடு பகுதியில் ரத்தினர்புரி அவென்யூ குடியிருப்பு மக்கள் அளித்த மனுவில், இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியின் மிக அருகில் காம்பேக்டிங் பனி யன் நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. இதில், இருந்து அடிக்கடி  சாம்பல் கழிவுகள் மற்றும் புகை  வெளியாகி சுற்றுச்சூழலை பாதித்தி வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுற்றுசூழல் அதிகாரிகளி டம் பலமுறை மனு அளித்தும் நடவ டிக்கை இல்லை. கடந்த 14ஆம்  தேதி நிறுவனத்தின் மேற்கூறை யில் தீப்பிடித்து வெளியேற்றும் விசிறிகளும் எரிந்து சாம்பாலானது. எனினும் தொடர்ந்து உரிய பாது காப்பு ஏற்பாடுகள் இல்லாமல் காம்பெக்டிங் நிறுவனத்தை நடத்தி  வருகின்றனர். எனவே, இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக் கொண்டனர். காங்கயம் வட்டம் மரவப்பாளை யம் கிராம மக்கள் அளித்த மனு வில், இப்பகுதியில் 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றன. இங்கு தென்னை நார் மில் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடை பெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு ஒரு ஆழ்குழாய் மட்டுமே உள்ளது. தென்னை நார் மில் அமைக்கப்பட் டால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும். ஆழ்குழாய் தண் ணீர் வீணாகிவிடும். எனவே, இதன் மீது நடவடிக்கை எடுத்து நார் மில் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

தீண்டாமை வேலியை அகற்றிடுக
அலகுமலை மக்கள் அளித்த மனுவில், இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ அட்டவணை வகுப்பைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் வழங்கப்பட்ட பஞ் சமி நிலங்களில், அதன் உடமையா ளர்களான இந்த சமூகத்தார் உழுது பயிரிட்டு வாழ முடியாதபடி சிலர் ஆக்கிரமித்து அராஜகம் செய்கின்ற னர். எங்களுக்குரிய நிலங்களை நாங்கள் தொடர்ந்து கேட்டு வந்தால் திடீரென எங்கள் தெருவிற்கு செல் லும் பாதையை கம்பி வேலி அமைத்து தடுத்து தீண்டாமை கடை பிடித்து வருகின்றனர். எனவே தீண்டாமை கம்பி வேலியை அகற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங் களை மீட்டுத் தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.

ஆபத்தான மின்கம்பிகள் 
திருக்குமரன் நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் அளித்த மனுவில், முதலாவது வீதி யில் வீட்டின் அருகில் மின்கம்பிகள் செல்கின்றது. இதனை, அகற்றக் கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மின்கம்பிகள் உரசி தீப் பிடிக்கும் அபாயம் ஏற்பட உள்ளது. மேலும் நீண்ட நாட்களாக தெரு விளக்கு இல்லை. இப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் அங்கன்வாடி உள் ளது. இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து தரவேண்டும். மேலும், இப்பகுதியில் குப்பை தொட்டி வைத்து சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தண் ணீர்பந்தல் காலனி கிளை சார்பில் அளித்த மனுவில். திருப்பூரிலிருந்து அவிநாசி செல்லும் நால்ரோட்டில் தண்ணீர் பந்தல் காலனி பகுதி யில் நால்ரோட்டில் சாலை விபத்து கள் அதிகமாக ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்படுகிறது. கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், குடிநீர் எடுக்க செல்லும் பொதுமக் கள், பனியன் கம்பெனிக்கு செல் லும் தொழிலாளர்களும் காலை, மாலை நேரத்தில் அதிக அளவில் நடந்து செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் பகுதியில் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து சிக்னலை அமைத்து தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

அலைக்கழிப்பு 
திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி  அருகில் வசிக்கும் ஜின்சி அப்ரா ஹிம் (38) என்கிற பெண் தனது இரு மகன்களுடன் அளித்த மனுவில், மூத்த மகன் மோஹித் பாலன் கடந்த கல்வியாண்டில் செங்கப்பள்ளி ஸ்ரீ குமரன் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பும், இளைய மகன் நாகூஷ் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்கள். குடும்ப பிரச்சனை காரணமாக இங்கு மகன்களை தொடர்ந்து படிக்க வைக்க இயலவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல் படும் பள்ளியில் மகன்களை சேர்ப்பதற்கு மகன்களின் மாற்றுச் சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் ஸ்ரீ குமரன் பள்ளி நிர்வா கம் ரூ.1.50 லட்சம் பாக்கி இருப் பதாகவும், அதைக் கொடுத்தால் தான் சான்றிதழ் தருவோம் என அலைக்கழிக்கின்றனர். இதனால் மகன்கள் படிப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் வாங்கி தருமாறு கேட்டுக் கொண்டார். திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த கல்யாணி (45) அளித்த மனுவில், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட தங்களுக்கு உரிமையுள்ள மாமனார் இடத்தை தங்கள் பெயரில் கிரைம் செய்ய  மாமனார் இறப்பு சான்றிதழ் தேவைப்படுகிறது. பலமுறை வடக்கு வட்டாட்சியர் அலுவல கத்தில் முயற்சி செய்தும், ரூ.10  ஆயிரம் செலவு செய்தும், காவல் துறையினர், மாநகராட்சி அலுவ லகம் என பணம் செலுத்த வேண் டும் என கேட்கிறார்கள். 12 முறை  ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த  நடவடிக்கையும் இல்லை. மாமனா ரின் இடத்தை தங்கள் பெயரில் மாற்றிடதகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

வீட்டுமனைப் பட்டா
மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அளித்த மனுவில், திருப் பூர் மாவட்டம் மங்கலம் கிராமம் சின்னபுத்தூர் பகுதியில் ஆதிதிரா விடர் சமூக மக்களுக்கு வீட்டுமனை களாக பிரிக்கப்பட்ட இடம் தொடர் பான வழக்கு நீதிமன்றத்தில் இருக் கும்பொழுதே ஆக்கிரமித்துள்ள னர். எனவே, இதன் மீது ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து வீடு இல்லாத கூட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். திருப்பூர் - தாராபுரம் சாலையில் மாவட்ட தலைமை மருத்துவம னைக்கு தினமும் 10 ஆயிரத்திற் கும் அதிகமானோர் வந்து செல் கின்றனர். தலைமை மருத்துவ மனை முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து காவல்துறையினரை நியமிக்க வேண்டும். மேலும் விபத்துகளைத் தடுக்க மருத்துவமனை முன்பு  வேகத்தடை அமைக்க வேண்டும் என ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை சார்பில் கேட்டுக் கொண் டனர்.