சிவகங்கை,அக்டோபர்.20- திருப்புவனத்தில் பால் வண்டியில் போதைப்பொருட்களைக் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பால் வண்டியில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா, கூல்லிப் உள்ளிட்ட 100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருட்களைக் கடத்தி வந்த ரமேஷ்(51), மலைச்சாமி(38) ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.