tamilnadu

img

திருப்புவனம் பேரூராட்சி டெண்டரில் ஊழல் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜூன் 2- சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் பேருராட்சியில் ரூ. 2கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரில் ஊழல், முறைகேடு நடைபெற் றுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி அனைத்துக்கட்சிகள் சார் பில் திருப்புவனத்தில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் த.சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தண்டி யப்பன், ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், ஈஸ்வரன், மதிமுக ஒன்றியச் செய லாளர்கள் சேகர், முத்திருளு, காங்கிரஸ் கட்சி பொறுப்பா ளர்கள் செந்தில்குமார், கருப் புச்சாமி, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி நிர்வாகி கண்ணன், சிபிஐ சார்பில் சௌந்தரபாண்டி யன், சுநதரலிங்கம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி கலாம் உட் பட பலர் கலந்துகொண்டனர்.

;