தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரும் பொழுது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே போலிஸார் காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் தனசேகரன் உதவியுடன் கார் ஏற்பாடு செய்யப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அமைச்சர் மெய்யநாதனின் உடல்நிலை சீரானதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.