சிதம்பரம்:
பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமர வைத்த சாதிய வன்மம் குறித்த தீக்கதிர் செய்தி எதிரொலியாக, ஊராட்சிசெயலாளர் கைது செய்யப்பட்டுள் ளார்.
பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சிமன்ற பெண் தலைவரைத் தரையில் அமர வைத்து ஊராட்சி மன்றகூட்டம் நடத்திய சம்பவம் புவனகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம்புவனகிரி ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்டதெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக ராஜேஸ்வரி சரவணகுமார் பணியாற்றி வருகிறார். இவர் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர். துணைத் தலைவராக உள்ள மோகன் ராஜன் மாற்று வகுப்பைச் சார்ந்தவர்.ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும்வார்டு உறுப்பினர் ஒருவர் பட்டியலினத்தவர் என்பதால்இவர்கள் இருவரும் ஊராட்சி கூட்டங்களில் தரையில் தான் அமர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். உச்சகட்டமாக ஜூலை மாதம்17ஆம் தேதி நடந்த கூட்டத்தில் மற்றஜாதி வார்டு உறுப்பினர்கள் நாற்காலியில் அமர ஊராட்சி மன்ற தலைவரைஒதுக்குப்புறமாக தரையில் அமரச் செய்து உள்ளனர்.மேலும், தேசியக் கொடியை கூடஏற்றக் கூடாது என ஊராட்சிநிர்வாகத்தை அவரது கட்டுப்பாட்டில் வைத்து இருந்துள்ளார். இதற்கு ஊராட்சி செயலாளர் சிந்துஜா துணையாக இருந் துள்ளார். இதுகுறித்த செய்தி அக்டோபர் 10 ஆம் தேதி படத்துடன் தீக்கதிர்வெளியிட்டது.
இதனை அடுத்து, சம்பந்தப்பட்டகிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாமூரி, கூடுதல்ஆட்சியர் ராஜகோபால் சுங்கார, சிதம்பரம் சாராட்சியர் மதுபாலன் மற்றும் வட்டாட்சியர் கள், உள்ளாட்சி துறை அதிகாரிகள் என மாவட்ட நிர்வாகமே தெற்குதிட்டை கிராமத்தில் குவிந்தது. இதனால் காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர்.பின்னர், தெற்கு திட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவரிடம் பூட்டிய அறையில் விசாரணை நடைபெற்றது. இதில் நான்காவது வார்டு உறுப்பினரும் ஊராட்சி மன்றத்துணைத் தலைவரும் பங்கேற்கவில்லை.அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் உண்மை என்பதுதெரியவந்தது இதனையடுத்து ஊராட்சி மன்றத் துணை தலைவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. இந்த விசாரணையை முடித்து வெளியில் வந்த மாவட்ட ஆட்சியர், “இதுபோன்ற சம்பவம் மறுபடியும் நடந்தால்தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி உறுப்பினர்களுக்குஎச்சரிக்கை செய்தார்”.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,” செய்தித்தாளில் வந்த (தீக்கதிர்) சம்பவம் குறித்து நேரடியாக விசாரணை மேற் கொண்டோம். அவை அனைத்தும் உண்மைதான்” என்றார்.
மேலும் வருவாய், காவல், உள் ளாட்சித்துறைசார்பில் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற செயலாளர்சிந்துஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதுசெய்துள்ளதால் பணியிடை நீக்கம்
....தொடர்ச்சி 3 ஆம் பக்கம்....