செய்யப்பட்டிருக்கிறார் என்றும் ஆட்சியர்கூறினார்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தலைமறை வாகியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சிமன்றத் துணைத் தலைவருக்கு நோட்டீஸ் கொடுத்துதக்க நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர்தெரிவித்தார்.
ஊராட்சி மன்றத் துணை தலைவர் தேசிய கொடி ஏற்றியது குறித்து விரிவானவிசாரணை நடைபெறும். மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வுஏற்படுத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றியச் செயலாளர் சதானந்தம் கூறுகையில்,” சம்பந்தபட்ட ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் காசோலை கையாள உத்தரவிட வேண்டும் என்றும் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்குபிரச்சனை ஏற்படாமலிருக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான வாஞ்சிநாதன் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை செய்துஉரிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க இம்மாதம் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.