tamilnadu

img

அண்ணாமலை பல்கலை. வேளாண் பட்டப்படிப்பு... தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் வெளியிட பதிவாளர் ஞானதேவன் பெற்றுக்கொண் டார்.அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை ஆன் லைனில் மட்டுமே நடைபெறும்.

இதற்கான விபரங்கள் இரண்டு தினங்களில் பல் கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) வெளியிடப்படும்.விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பல் கலைக்கழக இணையதளத்தை பார்வையிட்டு அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை துறை பட்டப் படிப்புகளுக்கு 8654 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 8, 346 விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன இவர்களில் 21 மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள்.இதேபோல் வேளாண்மைத்துறை சுயநிதி பிரிவில் 2815 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 2727 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. தோட்டக்கலைத் துறையில் சேர்வதற்கு 1,669 மாணவர்கள் விண்ணப்பித் திருந்தனர் இதில் 1,628 மாணவர்களின் விண் ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில் வெள்ளக்கோயில் மாணவி சுவாதி 97.5 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். கோபிசெட்டிபாளையம் ஸ்ரீமதி 196 மடிப்புகளுடன் இரண்டாவது இடத்தையும் சிதம்பரம் மாணவி அபிராமா ஸ்ரீ 193 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்.சுயநிதிப் பிரிவில் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீமதி 196 மதிப்பெண்களுடன் முதலிடமும், கும்பகோணம் மாணவன் அபிராகுல் 190 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடமும் கரிமங்கலத்தைச் சேர்ந்த மாணவி சன்மதி 189 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தோட்டக்கலை துறையில் காளையார்கோவில் மாணவி அல்பினா 198 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடமும், ஈரோட்டைச் சேர்ந்த கவிந்தன் 197 மதிப் பெண்களுடன் இரண்டாவது இடமும் திருவட்டாரை மாணவி தர்ஷினி  189.5 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.இந்தத் தகவலை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஞானதேவன் தெரிவித்துள்ளார்.