tamilnadu

img

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கிடுக- சிஐடியு ஆர்ப்பாட்டம்

சேலம்,ஆக. 1- சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கிடக்கோரி சிஐடியு சங்கத்தினர் சனியன்று ரயில்வே கூட்செட் நுழைவாயின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில், சுமைப்பணி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் நிறை வடைந்துவிட்டது. இந்நிலையில், புதிய ஊதிய உயர்வு கேட்டு ரயில்வே பார் வேடிங் கிளியரன்ஸ் அசோசியே சனுக்கு  பல முறை கோரிக்கை வைக் கப்பட்டும் இதுவரை எந்த தீர்வும் இல்லை. எனவே கொரோனா சூழ லில், சம்பள உயர்வை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு இரயில்வே ஏற்று மதி இறக்குமதி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.வெங் கடபதி, சங்க நிர்வாகிகள் பி.மதியழ கன், எஸ்.பிரபு, சரவணன், சுந்தர் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;