சிஐடியு பாராட்டு
கும்பகோணம், நவ.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் அரசு போக்குவரத்து கழக தலைமையிடமாக கும்பகோணம் கோட்டம் இருந்து வருகிறது. இந்நிர்வாக அலுவலகத்தில் இரு பணிமனையில், தொழில்நுட்பம் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 416 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கிறார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் அதிகாரியாக புதிதாக வந்துள்ள கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் தொழிலாளர்களின் நலன் கருதியும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் தொழிலாளர்களுக்கு போதிய விடுப்பு வழங்கி தொழிலாளர்களுக்கு இம்மாதம் ஆப்சன்ட் போடாமல் தொழி லாளர்களை ஊக்கப்படுத்தி வரு கிறார். இதற்காக பணிமனையில் இம்மாதம் தொழிலாளர்களுக்கு போதிய விடுப்பு வழங்கி ஆப்சன்ட் போடாமல் சிறப்பாக பணியாற்ற ஊக்கப்படுத்தி வருவதாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) பொதுச் செயலாளர் ஜி.மணிமாறன் கூறுகையில், தொழில்நுட்பம் மற்றும் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட தொழி லாளிகள் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு பொது மக்கள் நலன் கருதி பணியாற்றி வரு கிறார்கள். இந்நிலையில் இதுபோன்ற ஊக்கப்படுத்தும் கும்பகோணம் கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் போல் அனைவரும் செயலாற்றினால் ஊழியர்களும் தொழிலாளர்களும் சிறப்பாக பணி செய்து இன்னும் நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பர். அதேபோல் இப்பணியை பாராட்டி ஊக்கப்படுத்தும் கிளை மேலாளர் ராதாகிருஷ்ணனை சிஐடியு சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம் என தெரிவித்துள்ளார்.