சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள சார்பதிவாளர் அலு வலகம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகாலமாக அரசின் கவனத்துக்கொண்டு வந்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்த கட்டடத்திற்கு எப்போது மாற்று கட்டடம் கட்டப்படும் என்றும் திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு எழுப்பிய துணைக் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.சி. வீரமணி,“இந்த ஆண்டில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.