tamilnadu

img

முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம்

முதல்வருக்கு சிஐடியு கோரிக்கை

சென்னை, ஏப்.3- முறைசாரா தொழிலாளர்கள் அனை வருக்கும் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தலைவர் அ.சவுந்தர ராசன், பொதுச்செயலாளர் சுகுமாரன் ஆகி யோர் விடுத்திருக்கும் அறிக்கை வரு மாறு:-

கொரோனோ வைரஸ் தடுப்பு மற்றும்  பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளதால் முறை சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உத்தரவாதப் படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நிவாரண உதவிகளை அறி வித்துள்ளார். இதில் கட்டுமானம், ஆட்டோ மற்றும் நடைபாதை வியாபாரம் ஆகிய தொழில் வாரி நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1000 மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் ஒன்றாகும்.

தற்போது கட்டுமானம், ஆட்டோ மற்றும் நடைபாதை வியாபாரம் நல வாரி யங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்க  ளில் ஒரு பகுதியினர் புதுப்பிக்காததை கார ணம் காட்டி இந்த  நிவாரண உதவிகள் மறுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. புதுப்பித்தல் என்பது ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை என்கிற நிலை வந்தபிறகு  2015க்கு முன்பு பதிவு செய்தவர்கள் புதுப்  பிக்க முடியும். எனவே பதிவு செய்யப் பட்டுள்ள கட்டுமானம், ஆட்டோ மற்றும் நடைபாதை வியாபாரம் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தையல், சமையல், சலவை, முடித்திருத்துவோர், வீட்டு பணி யாளர், கைத்தறி, விசைத்தறி, சுமைப்பணி  உள்ளிட்ட 64 தொழில்களுக்கு உடலு ழைப்பு மற்றும் 13 நல வாரியங்கள் அரசால்  நடத்தப்படுகிறது. இந்த வாரியங்கள் உட்பட மொத்த முள்ள  17 நல வாரியங்களில் சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனை வரும் ஊரடங்கு உத்தரவால் வேலை யிழந்து வருமானம் இன்றி உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லா மல் தவிக்கின்றனர்.   எனவே இவர்கள் அனைவருக்கும் பாகு பாடின்றி நிவாரண உதவி அளிப்பதற்கான நடவடிக்கையினை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

;