சென்னை, ஆக. 24- சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சி யில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் பூர ணசுந்தரி, பாலநாகேந்திரன் ஆகியோரை பாராட்டி, நினை வுப் பரிசை வழங்கி முதல மைச்சர் வாழ்த்து தெரி வித்தார். மேலும், ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 பேரை மீட்டதற்காக, தஞ்சா வூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதருக்கு வீர, தீர செய லுக்கான 2019-ஆம் ஆண்டுக் கான ஜீவன் ரக்சா பதக் விரு திற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கவுர வித்தார். கலை பண்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கான கட்ட டங்களை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். கலை பண்பாட்டுத் துறை யின் https://www.artand culture.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் கலைஞர் களுக்கான தனி இணைய வாயிலை துவக்கி வைத்து, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அக ழாய்வுகள் குறித்த அறிக் கையை வெளியிட்டார்.