வேலூர், ஜூலை 23- வேலூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறை யினர் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள் ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள் ளிட்ட 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலையொட்டி 4 கம் பெனி துணை இராணுவப் படையினர் வேலூர் வர வழைக்கப்பட்டனர். இந்த நிலையில், வேலூர் சைதாப்பேட்டை முருகர் கோவில் பகுதியிலிருந்து வேலூர் அண்ணா சாலை பகுதி வரை வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பிரே வேஷ் குமார் தலைமையில் பாதுகாப்பு படையினர் மற் றும் காவல்துறையினர் பங் கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மொத் தம் 230 பேர் பங்கேற்றனர்.