tamilnadu

img

சாலை விபத்து கணவன்-மனைவி பலி

மதுரை, மார்ச் 20- மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த வர் கண்ணன் (55). ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி வசந்தி (50). இவர்கள் இருவரும் வெள்ளிக் கிழமை காலை, மதுரையை அடுத்துள்ள தனக்கன்குளம் சீனி வாசா காலனியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். தனக்கன்குளத்தை அடுத்த நான்கு வழிச்சாலையை அவர்கள் கடக்க முயன்ற போது சமயநல்லூர் பகுதியிலிருந்து  விருதுநகர் நோக்கி வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண வனும், மனைவியும்  சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். ஆஸ்டின் பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரது உட லையும் மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

;