tamilnadu

img

சமையல் உருளை விநியோகம் செய்பவர்களை பாதுகாக்க சிஐடியு கோரிக்கை

மதுரை, மார்ச் 26- மதுரையில் சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. இது தொடர்பாக மதுரை சுமைப்பணி தொழிலா ளர் சங்க மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:- மதுரை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் உள்ளனர். கொரானோ வைரஸ் தாக்கம் காரணமாக சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையிலிருந்து கூடு தலாக ரூ. 2 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும்.  சமையல் எரிவாயு உருளை வினியோகம் செய்யும்  பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு வழங்க வேண்டும். நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;