கொரோனா நிவாரண நிதி ரூ.7,500 வழங்கிடு!
திருநெல்வேலி, ஆக.14- தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம் மேளனம் முடிவின்படி இ-பாஸ் முறையை ரத்து செய்திட வேண்டும். அனைத்து மோட் டார் தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிவாரண நிதியாக மாதம் ரூ.7500 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன் வைத்து நெல்லை ஆட்சியர் அலு வலக வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நெல்லை மாவட்ட சாலை போக்குவரத்து சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற் றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட இணை செயலாளர் ஆர்.முருகன் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து சங்க தலைவர் காமராஜ், சாலை போக்குவரத்து நிர்வாகிகள் சதக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் பெருமாள் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சுடலைராஜ் கண்டன உரை யாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் நிறைவுரையாற்றினார்.
தென்காசி
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலை வர் எம்.வேல்முருகன் தலைமை தாங்கி னார். சி.ஐ.டி.யு நிர்வாகிகள் லெனின்குமார், கிருஷ்ணன், தாணுமூர்த்தி, புதியவன், சுப்பிரமணியன், ராமமூர்த்தி, குருசாமி, கருப்பையா, சாலை போக்குவரத்து நிர்வா கிகள் தென்காசி சங்கர், முக்கையா, சத்திய மூர்த்தி, முத்துக்குட்டி, ஆறுமுகம், முத் தையா, ஊத்துமலை, முத்துக்குமார் சுரண்டை, ராம்குமார், குற்றாலம், குத்தா லிங்கம், மணி, கணபதி, செல்வராஜ், மாரி, பாவூர்சத்திரம், மினிபஸ் தலைவர் பாபு உள்பட 40க்கும் மேற்பட்ட சாலை போக்கு வரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.