tamilnadu

img

சிங்கப்பூர் தேர்தல் : லீ சியன் லூங் மீண்டும் வெற்றி

சிங்கப்பூர், ஜூலை 11- கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்துள்ளது . மொத்தம் 26.5 லட்சம் வாக்கா ளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று தனி நாடாக மலர்ந்த பிறகு சிங்கப்பூர் மக்கள் வாக்களித்த 14ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இது. சிங்கப்பூரின் சிற்பி என்று குறிப்பிடப்படும் அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சியின் ஆட்சி தான் கடந்த 55 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இம்முறை யும் அக்கட்சியே வென்று ஆட்சி அமைக்கிறது.

இத்தனை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே அவ்வப்போது மாறியுள்ளனவே தவிர, பல தேர்தல்களில் வேட்புமனுத்தாக்கல் நடக்கும் தினத்தன்றே இக்கட்சி நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிடும். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த 13ஆவது பொதுத் தேர்தலில்தான் மக்கள் செயல் கட்சி முதன்முறையாக அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை எதிர்கொண்டது. இந்தத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கின.

முதல் ‘டிஜிட்டல் தேர்தல்’

ஒருவகையில் இது சிங்கப்பூர் குடிமக்கள் எதிர்கொண்ட முதல் ‘டிஜிட்டல் தேர்தல்’ என்று கூறலாம். கொரோனா விவகாரம் காரணமாக பொதுக்கூட்டங்கள் நடத்தவும், பெருந்திரளாகக் கூடி பிரச்சாரம் மேற் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. எனவே சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில்தான் அதிகளவில் பரப்புரை கள் மேற்கொள்ளப்பட்டன. வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகளும் கைகொடுத்தன.

ண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டா லும் வாக்காளர்களுடன் கைகுலுக்கக் கூடாது, தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளால் மக்களை நெருங்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை எனும் ஆதங்கம் அரசியல் கட்சியினருக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆளுங்கட்சியின் ஆதிக்கமே கடந்த 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடிக்கும் சிங்கப்பூர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தத் தேர்தலில்தான் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் தேர்தல் களம் கண்டன. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உள்ள 93 தொகுதிகளில் 14 மட்டுமே தனித் தொகுதிகள். 17 குழுத் தொகுதிகள் உள்ளன. (நான்கைந்து நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி குழுத் தொகுதிகள் எனக் குறிப்பிடுகிறார்கள்).

ஆர்வத்துடன்  வாக்களித்த மக்கள்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது சிங்கப்பூர் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற திரண்டு வந்து வாக்களித்தனர். இதனால் வாக்களிக்கும் நேரம் முடிவடைந்த பிறகும் ஏராளமானோர் வாக்குச் சாவடிகளில் வரி சையில் காத்துக் கிடந்ததால் வாக்களிப்பு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப் பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், முறைகேடுகள் நடந்ததாக யாரும் புகார் எழுப்பவில்லை. உடல்நலம் குன்றியவர்கள் கொரோனா வால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள் ளோர், காய்ச்சல் இருப்போர் இரவு 7 முதல் 8 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. வெளிநாடுகளிலும் உள்ள சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் தேர்தலைப் பொறுத்தவரை கடும் போட்டி, ஆட்சி மாற்றம் என்பது குறித் தெல்லாம் பெரும்பாலும் யாரும் பேசுவ தில்லை. எதிர்க்கட்சிகளுமே ஆட்சி மாற்றம் குறித்து வாய் திறப்பதில்லை. “தேர்தலின் முடிவில் மீண்டும் மக்கள் செயல் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும்  என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியும். எனினும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக ளுக்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைப்போம். அவ்வாறு நடந்தால் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக கடமையாற்றுவோம்,” என்றார் பாட்டாளி கட்சியை சேர்ந்த பிரித்தம் சிங்.

ஆளும்கட்சியின்  வாக்கு விகிதம் குறைந்தது

இம்முறை மொத்தமுள்ள 93 தொகுதிக ளில் ஆளும் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க் கட்சிகள் 10 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தா லும் இத்தேர்தல் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கடந்த முறை மக்கள் செயல் கட்சி 69.9 விழுக்காடு வாக்குக ளைப் பெற்றிருந்தது. இம்முறை அது 61.24  விழுக்காடாக குறைந்துள்ளது. மொத்தம் 8.7 விழுக்காடு வாக்குகளை அக்கட்சி இழந்துள்ளதுடன் இரண்டு குழுத் தொகுதிக ளையும் எதிர்க்கட்சிகளிடம் பறிகொடுத் துள்ளது. இது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள் ளார் பிரதமர் லீ சியன் லூங். கடந்த முறை யைவிட இப்போது எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் இரட்டிப் பாகி உள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலை யில் சனிக்கிழமையன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் லீ சியன் லூங் நாட்டு மக்கள் தெளிவான முடிவை எடுத்திருப்பதா கவும், இது நல்ல முடிவு என்றும் தெரி வித்தார். சிங்கப்பூரை தற்போதைய நெருக்கடியி லிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் தமது தலைமையிலான அமைச்சரவை யில் இடம்பெற்றுள்ள தர்மன் சண்முக ரத்தினம், கா. சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து செயல்படு வார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, இம் முறை இந்திய, மலாய் வாக்காளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சிங்கப்பூர் மக்க ளும் தேசிய அளவிலான அம்சங்களை  மனதிற்கொண்டு, தேசிய அடிப்படையி லேயே வாக்களித்திருப்பதாக சுட்டிக் காட்டினார்.  

                (பிபிசி)