சிகிச்சை ஏற்பாடுகள் தீவிரம்
திருவனந்தபுரம், ஜூலை 20- கேரளத்தில் தொடர்பு மூலமாக கோவிட் பரவல் அதிகரித்தாலும் நம்பிக்கையுடன் நோயை எதிர்கொள்ள மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. வட்டார அளவில் உருவெடுக்கும் நோய் பரவல் மையங்களை அந்தந்த இடங்களில் எதிர்கொள்வதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பஞ்சாயத்துகளில் தலா 100 படுக்கைகள், மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் தலா 50 படுக்கைகள் என அரை லட்சம் படுக்கைகளுடன் முதல்கட்ட முதலுதவி மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் இவை தயாராக உள்ளன.
கேரளத்தில் தற்போது கிராமங்களிலும் நோய் பரவல் துவங்கி விட்டது. தினமும் மருத்துவமனை களில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தால் அதை எதிர்கொள்ள சுகா தார ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்படு கின்றன. ஆபத்தான நிலையில் அல்லாத கோவிட் நோயாளிகள் நோய் பரவும் கால அளவை கடக்கும் வரை இந்த முதல்கட்ட சிகிச்சை மையங்களில் பராமரிக்கப்படுவார்கள்.
சமூகப் பரவலாக கோவிட் மாறாமல் தடுப்ப தற்கு இது உதவும். பரிசோதனை முடிவு நோய் இல்லை என வந்தால் இந்த மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாவட்ட பேரிடர் மீட்பு நிவாரண ஆணையத்தின் மேற்பார்வையில் உள்ளாட்சி அமைப்புகள் இந்த மையங்களை அமைத்து வருகின்றன. தேவை யான சுகாதார சேவைகளை சுகாதாரத்துறை உறு திப்படுத்தும். என்எச்எம் மூலமாகவும் அதல்லா மலும் இதுவரை சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுர த்தில் 13 முதல் கட்ட சிகிச்சை மையங்களில் 1300 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. காரியவட்டம் கிரீன்பீல்டில் 750 படுக்கைகள் கொண்ட மையம் தயாராக உள்ளது. 23 ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் படுக்கைகள் தயாராகும். தேவை ஏற் பட்டால் பள்ளிப்புறம் சிஆர்பிஎப் முகாமில் 10 ஆயி ரம் பேருக்கான சிகிச்சை வசதி ஏற்படுத்தப்ப டும். இதுபோல் 14 மாவட்டங்களிலும் சிகிச்சைக்கான அவசர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.