70 சவரன் நகை கொள்ளை
படப்பை, அக். 26- படப்பை அருகே உள்ள ஆனூர் வரதராஜபுரத்தில் குடியிருப்பவர் பிரபாகரன். இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். பிரபாகரன் புதன்கிழமை வீட்டை பூட்டி விட்டு வெளி யூர் சென்றிருந்தார். இந்நிலையில் வியா ழக்கிழமை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர் கள் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே ஊரிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 சவரன் நகைகள் கொள்ளை அடிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மணி மங்க லம் காவல் நிலையத்தில் பிர பாகரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கதறி அழுத பாஜக அமைச்சர்
மும்பை, அக். 26- மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சரான பங்கஜா முண்டே, பார்லி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்ட அவரது அண்ணன் தனஞ்செய் முண்டேவிடம் தோற்றுப் போயிருக்கிறார். இந்த தோல்வியை தாங்க முடியாத பங்கஜா முண்டே, கண்ணீர் விட்டு கதறி அழுதது, தொலைக் காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கி றேன், தனது ஆதரவாளர்கள் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்று பங்கஜா முண்டே அழுத படியே பேட்டியும் அளித் துள்ளார்.