tamilnadu

img

கொரோனா வைரஸ் : சிபிஐ-எம் தலைவர் சியாமல் சக்ரவர்த்தி உயிரிழப்பு

மேற்கு வங்காளத்தின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர் - சியாமல் சக்ரவர்த்தி - கொரோன வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னர், இன்று கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார்.

இவர் 1982 மற்றும் 1996 க்கு இடையில் போக்குவரத்து அமைச்சராக மூன்று முறை வங்காளத்தில் பணியாற்றியவர், கடந்த மாதம் கொரோனா  பரிசோதனை செய்தார்.பின்  ஜூலை 30 ம் தேதி பீர்லெஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். இன்று காலையில் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது,பின் சிகிச்சை பலனின்றி  கொல்கத்தா மருத்துவமனையில் இன்று காலமானார்.

சியாமல் சக்ரவர்த்தி ஒரு மூத்த தொழிற்சங்கவாதி மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (சிஐடியு) செயற்குழு உறுப்பினராக இருந்தார்.சிபிஎம் -ன் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான மத்திய குழுவின்  உறுப்பினராகவும் ,சிஐடியூ மாநிலத் தலைவர் மற்றும் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.