விஜயவாடா, அக்.16- ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணி அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் காலில் போட்டு மிதிக்கிறது. மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்தும் இவர்களுக்கு எதிராக இடது சாரிகள்- மதச்சார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள், தேசபக்தர்கள் அனைவரும் ஓரணி யில் திரள வேண்டும். இது இன்றைய காலத்தின் தேவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட் டில், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு விஜயவாடாவில் சனிக் கிழமை தொடங்கி நடைபெற்றுவருகிறது. மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐ உள்ளிட்டஇடதுசாரி சக்திகள் ஒன்றிணைந்து நமது ஒற்றுமையை உறுதிப்படுத்தி ஆர்எஸ்எஸ் -பாஜக கூட்டத்தை கொள்கை ரீதியாக எதிர் கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் - பாஜக காவிக் கூட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக ஆபத் தான வகுப்புவாத கொள்கைகளை கடைப் பிடிக்கிறது. பெரும்பான்மை-சிறுபான்மை என மக்களைப் பிளவுபடுத்துகிறது. அந்தந்த மாநி லங்களில் சாதியத்தையும் தனது நலனுக்காகப் பயன்படுத்துகிறது.
நாட்டின் நலன், மக்கள் ஒற்றுமையை பாது காக்க இடதுசாரிகள், அனைத்து மதச்சார்பற்ற சக்திகள் தேசபக்தர்கள் ஓரணியில் திரள வேண் டும். அதற்கு இடதுசாரிக் கட்சிகள் முன்முயற்சி எடுக்க வேண்டும். கூட்டுக் களவாணி முதலாளித்துவம் அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட்டு கள் ஆட்சியாளர்கள் கைகோர்த்துள்ள கூட்டுக் களவாணி முதலாளித்துவம் நாட்டின் பொரு ளாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது. பொரு ளாதார இறையாண்மை கேள்விக்குறியாக் கப்படுகிறது. மோடி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது. எந்த சமூகப் பொறுப்பும் இல்லாத பன்னாட்டு பெருநிறுவனங்கள் நமது இயற்கை வளங் களைச் சூறையாடுகின்றன. வேலையில்லா திண்டாட்டம் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள் ளது.கொரோனா தொற்றுநோய் காலத்தில் மோடி அரசின் தவறான நிர்வாகம் பல்லா யிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது என்றும் டி.ராஜா சாடினார். பொது சுகாதாரம், பொதுக் கல்வி, நிலம், வீட்டுவசதி, வேலை வாய்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். நாட்டையும், மக்க ளையும் பாதுகாப்பதில் இடதுசாரிகளின் பங்க ளிப்பு மகத்தானது. பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஆர்எஸ்எஸ் எதையும் சாதித்துவிடமுடியாது. அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்போம் என் றும் அவர் கூறினார்.
சாவல்களை எதிர்கொள்வோம்: யெச்சூரி
மாநாட்டில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதா ராம்யெச்சூரி, “மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து மக்களை வழிநடத்திச் செல்ல ஒன்று பட்டு செயல்பட வேண்டும். மக்கள் மிகப் பெரும் சவால்களை சந்தித்து வருவதோடு அனைத்து நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஜனநாய கம், சகிப்புத்தன்மையையும் போற்றிப் பாது காத்து வருகிறது. ஆர்எஸ்எஸ் கூட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்பதோடு ஜனநாயகத்தின் மீதும் கடுமையான தாக்கு தலை நடத்தி வருகிறது. மதச்சார்பற்ற நாட்டில் ஆர்எஸ்எஸ் தனது செயல்திட்டத்தை புகுத்தி மேற்கொளும் நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும்” என்றார். சிபிஐ எம்எல் (விடுதலை) பொதுச் செயலா ளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் ஜி.தேவராஜன் ஆகி யோரும் மாநாட்டில் உரையாற்றினர். இந்த ஐந்து நாள் மாநாட்டில், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற் றுள்ளனர்.