tamilnadu

img

“சாதியம் தகர்ப்போம், சமத்துவம் காண்போம்”

“சாதியம் தகர்ப்போம், சமத்துவம் காண்போம்”

சாதியம் தகர்ப்போம், சமத்துவம் காண் போம்” என்கிற உறுதியேற்போடு, நாடு முழுவ தும் சட்டமேதை அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் திங்களன்று எழுச்சியோடு கொண் டாடப்பட்டது. அரசியமைப்புச் சட்டத்தின் சிற்பி, சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட் டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு இயக் கத்தினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செய்தனர். இதில், சாதியம் தகர்ப் போம், சனாதானத்தை வேரறுப்போம், மக்கள்  ஒற்றுமையை பாதுகாப்போம், சமத்துவ சமூ கத்தை படைப்போம் என்கிற சூளுரையை ஏற்றனர்.   இதன்ஒருபகுதியாக, கோவை மலையாளி சமாஜம் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கங் கிற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பி.ஜோதிகுமார் தலைமை  வகித்தார். வாலிபர் சங்க மாவட்டப் பொருளா ளர் எம்.தினேஷ் ராஜா வரவேற்றார். தீண்டாமை  ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.மகேஸ் வரன், மாவட்ட துணைத்தலைவர் ரத்தினகுமார் ஆகியோர் உரையாற்றினர். ‘இந்திய சமூக வாழ் வில் அம்பேத்கர்’ என்ற தலைப்பில், ஈரோடு மக் கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கருத்துரையாற்றினார். இந்நிகழ் வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தீண் டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பு கள் சார்பில் பலர் கலந்து கொண்டனர். முடி வில், மாவட்ட இணைச்செயலாளர் த.நாகரா ஜன் நன்றி கூறினார்.  கோவை, புலியகுளம் பகுதியில் நடை பெற்ற நிகழ்விற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச்செயலாளர் த.நாகராஜ் தலைமை வகித்தார். திமுக நிர்வாகிகள் எஸ். பாலமுருகன். தி.க.வீரமணி, காங்கிரஸ் நிர்வாகி எம்.எஸ்.பார்த்திபன், சிபிஐ வட்டச் செயலாளர் மாணிக்கம், சிபிஎம் கிளைச் செயலாளர்கள் கே. நாகராஜ், பாரதி உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, டாடாபாத் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு, சிபிஎம் கிழக்கு நகரச் செயலாளர் சுபாஷ், சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா உட்பட பலர் கலந்து கொண்ட னர். ஈரோடு ஈரோடு பெரியார் நகரில் அலங்கரிக்கபட்டு வைத்திருந்த அம்பேத்கரின் படத்திற்கு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் சு.முத்துசாமி மலர்தூவி மரியாதை செலுத்தி னார். தொடர்ந்து பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ் வில், அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., கே.ஈ.பிர காஷ் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திர குமார், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் (பொ) ஜி.பழனி சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் மா.அண்ணாதுரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தரரா ஜன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா. லலிதா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி. ஏ.விஸ்வநாதன், திமுக மாநகரச் செயலாளர் மு.சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண் டனர். ஈரோடு தாலுகாவில் 3 இடங்களிலும், கோபி செட்டிபாளையம், தாழ்குணி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதேபோல சிவகிரி, மின்னப்பாளையம், கூட்டுஎல்லைக் காடு, பூசாரிபாளையம், சோளங்காபாளையம், பொன்விழா நகர் மற்றும் காகம் உள்ளிட்ட பகுதி களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பெருந்துறை தொலைபேசி நிலையத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை அரசியல மைப்பு சட்ட பாதுகாப்பு தினமாக அனுசரித்து உறுதி மொழியேற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு, பிஸ்என்எல் ஊழியர் சங்க செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சையத் இத்ரீஸ், மாவட்ட துணைச்செயலாளர் எஸ். கோபால், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் சி.மணி உட்பட பலர் கலந்து கொண் டனர். கோபிசெட்டிபாளையத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், அம்பேத் கரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் அமைப்பின் மாவட்டப் பொருளாளர் மாரிமுத்து, தாலுகா செயலாளர் கே.சி.ரங்கசாமி, துணைச் செயலாளர் என்.மாரன் ஆகியோர் பங்கேற்ற னர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், ஐந்துபனை கிராமத் தில், தமுஎகச சார்பில், அம்பேத்கரின் பிறந்த நாள் விழா சனி, ஞாயிறன்று கொண்டாடப்பட் டது. கிளைத் தலைவர் ஈ.தீபிகா தலைமை வகித் தார். முதல் நாள் பள்ளி மாணவர்களுக்கான ஓவி யம், கட்டுரை, கவிதை, அறிவுத்திறன் போட்டி கள் நடைபெற்றன. சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ‘வாசிப்பு, எழு துதல்’ என்ற தலைப்பில் உரையாற்றி, ஆணவப் படுகொலைக்கு எதிராக கையெழுத்து இயத் கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ‘வன்கொ டுமை தடுப்புச்சட்டம் – எதிர்கொள்ளும் சவால் கள்’ என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் கருத்துரையாற்றினார். இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சீ.சேகரன், மாவட்ட துணைத்தலைவர் க.கோபி, ஈரோடு மாவட்டச் செயலாளர் இ.கலைக்கோவன், திரா விடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் சாமி நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், கிளைச் செயலாளர் ப.ராஜ்குமார் நன்றி கூறினார். திருச்செங்கோடு, நரிபள்ளம் பகுதியிலுள்ள அண்ணலின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு ஒன்றியக்குழு சார் பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது. இந்நிகழ்வில், மூத்த தோழர் ஆதிநாராய ணன், நகரச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசபாண்டியன் ஆகி யோர் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி அரசு மருத்துவமனை அருகி லுள்ள அம்பேத்கர் சிலைக்கு, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணி விக்கப்பட்டது. இந்நிகழ்வில், முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.ஜெயராமன், செயலா ளர் ஏ.சேகர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட துணைத்தலைவர் ஏ.மாதேஸ்வரன் ஆகி யோர் பங்கேற்றனர். இதேபோன்று, அரூர் ரவுண் டானா அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, ஒன்றியச் செய லாளர் பி.குமார், கரும்பு வெட்டும் தொழிலாளர்  சங்க மாநிலச் செயலாளர் இ.கே.முருகன், விவ சாயிகள் சங்க நிர்வாகிகள்  எஸ்.கே.கோவிந் தன், கே.என்.ஏழுமலை, தீண்டாமை ஒழிப்பு முன் னணி நிர்வாகிகள் மாது, தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர். கடத்தூரிலுள்ள அண்ணலின் சிலைக்கு, சிபிஎம் வட்டச் செயலாளர் தி.வ. தனுஷன், மூத்த தோழர் தீர்த்தகிரி உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாலக்கோடு, காரிமங்கலம் வட்டக்குழு சார்பில், பாலக்கோடு திருமலை சீனிவாசன் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் பி.கோவிந்தசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முத்து, வட்டச் செயலாளர் பி.காரல்  மார்க்ஸ், வாலிபர் சங்க மாநில துணைச்செயலா ளர் பாலாஜி ஆகியோர், ரத்ததானம் வழங்கிய வர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இந்நிகழ்வில், வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் குறளரசன், செயலாளர் எம்.அருள்குமார், பொருளாளர் சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் செ.முத்துக்கண்ணன், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேல், துனைச்செயலாளர் பி. செந்தில்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் வி.பெரியசாமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ரன், பாலர் பூங்கா ஒருங் கிணைப்பாளர் கே.ஜோதிலட்சுமி, மக்கள் ஒற் றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எம்.சேது மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சங் கத்தின் மாவட்டத் தலைவர் ந.திருவேரங்கன், செயலாளர் சுரேஷ், ஓய்வூதியர் சங்க மாநில  துணைத்தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்ற னர். மேட்டூர் பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வி.இளங்கோ, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கருப்பண்ணன் ஆகி யோர் மரியாதை செலுத்தினர்.

சனாதனம் குறித்து முழக்கம்: பாஜகவினர் செருப்பு வீச்சு

'சேலம் அம்பேத்கர் சதுக்கம் பகுதியிலுள்ள, அம்பேத்கரின் உருவச்சிலைக்கு திங்களன்று பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்ஒருபகுதியாக, தமிழ்நாடு இளைஞர் இயக்கம் என்ற அமைப்பினர், ‘இந்து சாதனத்தை வேரறுத்த அம்பேத்கர் புகழ் ஓங்குக’ என்று கோஷம் எழுப்பினர். அப்போது, அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை  அணிவிக்க காத்திருந்த பாஜகவினர், அந்த அமைப்பினரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய குடியரசு கட்சியினர், சனாதனம் குறித்து பேசிய நிலையில், பாஜகவினர் காவல் அங்கிருந்த துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, செருப்பு உள்ளிட்ட பொருட்களை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அம்பேத்கர் சிலை அருகிலிருந்தவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘அம்பேத்கர் சிந்தனையும், மார்க்சியமும்’ சமத்துவ போராட்டத்தின் இரட்டைத் தூண்கள்!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கோவையில் அண்ணல் அம் பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, “இந்திய சமூக வாழ்வில் அம்பேத்கர்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், “பல்வேறு ஓடுக்குமுறைகளையும் கடந்து கல்வியில்  உயர்ந்த அம்பேத்கர், நாட்டில் சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு குரல் கொடுத்து, அரசியல் நிர்ணய சபைக்கு தலைமை வகித்தார். ஊடகம், அரசியல் பின் புலங்களின்றி, இந்தியாவின் அனைத்து தலித் மக்களுக்கும் சாதி எதிர்ப்பு உணர்வோடு, வர்க்கச் சிந்தனையையும் ஊட்டியவர் அம்பேத்கர். சாதி மற்றும் வர்ணாசிரமத்தின் வன்முறை களை எதிர்த்து அவர் தொடங்கிய அரசியல் - அறிவியல் போராட்டம், சமத்துவத்தை நோக்கி போராடும் அனைத்து இயக்கங்களையும் மார்க்சியத்தின் பெரிய அடிக்கல்லுடன் இணைக்க வேண்டும். மார்க்சிஸம் என்பது உலகிற்கு மாமருந்து. கொள்கைகள் ஒருபோதும் தோல்வி யடைவதில்லை” என்றார்.