tamilnadu

img

சாலையை சரி செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து இனிப்பு வழங்கி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாலையை சரி செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து இனிப்பு வழங்கி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், மே 23- அம்மாபேட்டை பகுதி யில் சேதமடைந்த சாலையை சரி செய்யாத மாநகராட்சி யைக் கண்டித்து, வாலிபர் சங் கத்தினர் இனிப்பு வழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாநகரம், அம்மா பேட்டை, மிலிட்டரி சாலை அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் தொடர்ந்து குண் டும், குழியுமாக சாலைகள் உள்ளது. இதனால் அவ்வ ழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்குள் ளாகி வருகின்றன. சாலையை சீரமைக்க வேண்டும், என வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சேலம் கிழக்கு மாந கரக்குழுவினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநக ராட்சியின் அலட்சியப்போக்கை கண் டித்து, வாலிபர் சங்கத்தினர் பொதுமக்க ளுக்கு இனிப்பு வழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சங்கத்தின் கிழக்கு மாநகரத் தலை வர் எஸ்.கோபிராஜ் தலைமை வகித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.