tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பயிற்சி முடித்தவர்களுக்கு பணி ஆணை

கோவை, மே 2– ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புடன் கூடிய   திறன் மேம் பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் பணி ஆணை வழங்கும் விழா வெள்ளியன்று நடைபெற்றது.  கோவை வடவள்ளியில் செயல்பட்டு நேர்டு தன்னார்வ அமைப்பு ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது. இதில் பயிற்சி பெற்ற  60 பேருக்கு சான்றிதழ் மற்றும் வேலைக்கான பணி ஆணை  வழங்கும் விழா, கோவை ஈச்சனாரி இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளியன்று நடைபெற்றது. நிகழ்ச் சியில் சான்றிதழ்கள் மற்றும் வேலைக்கான உத்தரவு கடி தத்தை பன்னாட்டு புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளர்ச்சி மைய இயக்குநர் சௌ.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்வில், நேர்டு தலைவர் சத்தியஜோதி, இரத்தி னம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாலசுப்ரமணியன், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல் லூரி இயற்பியல் தலைவர் உமா மகேஸ்வரி நன்றி கூறி னார்.

பேருந்து நிலைய கழிவறையில் ஆய்வு

நாமக்கல், மே 2- நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறை சுகாதாரமற்ற நிலையில் இருந்த நிலையில், மாதேஸ்வரன் எம்.பி., திடீர் ஆய்வு மேற்கொண்டு, சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் அமைந் துள்ள கழிவறை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக புகார் கள் எழுந்தன. இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப் பினர் மாதேஸ்வரன் வெள்ளியன்று திடீர் ஆய்வு செய்தார். அப்பொழுது கழிவறை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை  சுட்டிக்காட்டி சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். அது மட்டு மின்றி கழிவறைகளில் கதவுகள் இல்லாமல் இருந்ததையும் சுட்டிக்காட்டி உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார். கழி வறைகள் சுத்தமாக இல்லாவிட்டால் நோய் தாக்கும் அபா யம் ஏற்படும், என மாநகராட்சி ஆணையரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அறிவுறுத்தினார்.

ராயல் கேர் மருத்துவமனையில்  பிளாஸ்மா ஷீல்ட் தொழில்நுட்பம்

கோவை, மே 2– பொது சுகாதாரத்திலும், நோயாளிகளின் பாதுகாப்பிலும் ஒரு திருப்புமுனையாக, கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இந்தியாவில் முதன் முறையாக பிளாஸ்மா ஷீல்ட் எனப்படும் அதிநவீன தொற்று நோய் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.  இந்திய அரசின் ஆதரவுடன் இயங்கும் இடீஏ (Eta) ப்யூரிபி கேஷன் என்ற புதிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து  முதன்முறையாக பிளாஸ்மா ஷீல்ட் எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளது. பிளாஸ்மா தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த முறை, மருத்துவமனைச் சூழலை மேலும் சுகாதாரமானதாக வும், பாதுகாப்பானதாகவும் மாற்றியமைக்க உதவும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி குறித்து ராயல் கேர்  மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் க. மாதேஸ்வரன் கூறுகையில், “எங்கள் நோயாளிகள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதில் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருக்கி றோம். அந்த வகையில், நாட்டிலேயே முதன்முறையாக இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் பெரு மிதம் கொள்கிறோம். நோய்த்தொற்றுகளைத் தடுப்பது என் பது நோயாளிகளின் பாதுகாப்பின் மிக முக்கியமான அம்சம். இந்த இலக்கை அடைய நவீன தொழில்நுட்பத்தை முன்னெ டுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்

கோவை, மே 2– கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலை வருமான கணபதி ப. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒன்றிய அரசின் திட்டங்களின் முன்னேற் றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு எரிவாயு உருளைகள் இணைப்பு வழங்கும் திட்டம் ஆகிய வற்றின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளுடன் விரி வான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள், தங்கள் துறைகளின் கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டமிடல் குறித்து விளக்கமளித்தனர். அப்போது பேசிய தலைவர் கணபதி ப. ராஜ்குமார், திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் பயன்கள் மக்களை உடனடியாக சென்றடை யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணை யர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 52 கடைகள், 4 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல், மே 2- நாமக்கல் மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 56 கடைகள், 4 நிறு வனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தொழி லாளர்களுக்கு உரிய முறையில் விடுமுறை அளித்துள்ளனரா? என்பது குறித்து நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) சி.முத்து தலைமையிலான குழுவினர் பல்வேறு பகுதிகளில் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டனர். தொழில் நிறுவனங்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இயங்கு கின்றனவா? தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுகிறதா? என்பது தொடர் பாக இயங்கிய நிறுவனங்களில் விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில், 21 கடை களை ஆய்வு செய்ததில் 16 கடைகளிலும், 44 உணவகங்களை ஆய்வு செய்ததில் 36 உண வகங்களிலும், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவன ஆய்வுகளில் 4 நிறுவனங்களிலும் என மொத்தம் 52 கடைகள், 4 நிறுவனங்க ளில் உரிய விதிகள் கடைப்பிடிக்கப்படாமல் இயங்கியது தெரியவந்தது. இவற்றின் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாள்கள்) சட்டத் தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, சேலம் மாவட்டத்தில் விதி முறையை மீறி முன் அனுமதி பெறாமல் இயங்கிய 24 கடைகள், 54 உணவு நிறுவனங் கள் கண்டறியப்பட்டன. இந்த 78 நிறுவனங் கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் ஆகிய வற்றின் கீழ் வழக்குப்பதிந்து, மேல் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை மறித்த காட்டு யானை

மேட்டுப்பாளையம், மே 2– மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் பயணிகள் பீதியடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில், யானைகள் அவ்வப்போது சாலைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், வியாழனன்று மாலை சாலையை மறித்து நின்ற காட்டு யானையால் பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அரை மணி நேரத்திற்கு மேலாக மலைப்பாதையில் நின்றிருந்த காட்டு யானையால் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் வாகனங்களும் கோத்தகிரியி லிருந்து மேட்டுப்பாளையத்தில் வந்த வாகனங்கள்  ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று பயணிக்க முடியாமல் அணிவகுத்து நின்றன. இந்நிகழ்வின் காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கோடைக்காலத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு இடம் மாறி வருவதால் மலை பாதையில் பயணிப்போர் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.