tamilnadu

img

கரியக்கோயில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

கரியக்கோயில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

சேலம், ஏப்.30- வாழப்பாடி அருகே உள்ள  கரியக்கோயில் அணையிலி ருந்து புதனன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற் றுப்படுகை கிராம மக்கள் மற் றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்,  கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக் கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் அணை அமைந் துள்ளது. இந்த அணையால் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. பனைமடல், ஏ.குமார பாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களில் பாசன தடுப்பணைகளும், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம், பெத்த நாயக்கன்பாளையம் ஏரிகளும் நீர்வரத்து மற்றும் நேரடி பாசனம் பெறுகின்றன. கடந்தாண்டு பருவமழையின்போது பெய்த மழையால், அணை அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 50.90 அடி யில் 178 மில்லியன் கனஅடி தண்ணீரை மட்டும் அணை யில் தேக்கிவைத்துக் கொண்டு அணைக்கு வரும் உபரிநீர் இரு மாதங்களாக கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில், சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் அணைக்கு நீர்வரத்து நின்று போனது. ஆற்றுப்படுகை கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்தது. எனவே, கோடையை முன்னிட்டு கரியக்கோயில் அணை யிலிருந்து குடிநீர் தேவை, நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்காக ஆறு, வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று ஏப்.30 ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு விநா டிக்கு 108 கன அடி வீதம், நாளொன்றுக்கு 9.33 மில்லி யன் கன அடி தண்ணீர் தலைமை மதகு வழியாக கரியக் கோயில் ஆற்றில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தர விட்டது. மேலும், மே 10 ஆம் தேதி முதல் தொடர்ந்து 24 நாட்களுக்கு அணையின் வலது மற்றும் இடது வாய்க் கால்களில் விநாடிக்கு 15 கன அடி வீதம் மொத்தம் 30  கன அடி பாசனத்திற்கு சிறப்பு நனைப்பாக பாசன வாய்க்கால் களில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.  இதனையடுத்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள், புதனன்று கரியக்கோயில் அணை யிலிருந்து தலைமை மதகு வழியாக தண்ணீர் திறந்து வைத்தனர். இதனால் ஆற்றுப்படுகை கிராம மக்களும், நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.