tamilnadu

img

தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்'

தேர்தல் வாக்குறுதியின்படி தங்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஈரோட்டில் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 112 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சுமார் 2000 பயிற்றுநர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். நீதிமன் றம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க  வேண்டும் என்று உத்தரவிட்டும், இவர்க ளுக்கு இன்னும் பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை. காலமுறை ஊதியமும் வழங்கப்பட வில்லை. தேர்தல் வாக்குறுதியின்படி தங்களுக்கு  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என் றும் வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஈரோடு ஐடிஐ முன்பு மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரா.சுமதி தலைமை தாங்கினார். இதில், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்  செயலாளர் மு.சீனிவாசன் மற்றும் நிர்வாகி கள் கா.கண்ணன், எஸ்.ரமேஷ், ச.விஜய மனோகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில் வீ.சாவித்திரி நன்றியுரையற்றினார்.