கோவிலில் இருந்த 20 பவுன் தங்க நகை கொள்ளை: போலீசார் விசாரணை
சேலம், ஜூன் 7- வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோவி லில் இருந்த தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சிங்கி புரம் அத்தனூரம்மன் கோவிலுக்கு பொதுமக்கள் காணிக் கையாக அளித்த தங்கத்தாலி உள்ளிட்ட 20 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள், நாணயங்கள் கோவில் கரு வறை இரும்புப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந் நிலையில், வியாழனன்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், கருவறையின் கதவை உடைத்து, பெட்டியிலிருந்த தங்க நகை, வெள்ளிப் பொருட் கள், நாணயங்களையும் கொள்ளை அடித்துச் சென்றனர். இதனால், அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
அரசு பேருந்து மீது மினி லாரி மோதல் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி, ஜூன் 7- கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அரசு பேருந்து மீது மினி லாரி மோதிய விபத்தில், ஓட்டுநர்கள் இருவர் உயிரி ழந்தனர். 38 பயணிகள் படுகாயமடைந்தனர். தருமபுரியிலிருந்து வெள்ளியன்று பிற்பகல் அரசு பேருந்து ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வழியாக, திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதி யைச் சேர்ந்த பரமசிவம் (56) என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந் தில் நடத்துநர் ஆதிமூலம் உட்பட பயணிகள் 45 பேர் இருந் தனர். இதனிடையே, மத்தூரில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி எம்.சாண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை, சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்த இந்திரகுமார் (32) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது மத்தூர் புறவழிச்சாலை அருகே செல் லும் போது, அதிவேகமாக சென்ற மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. இவ் விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் பரமசிவம், மினி லாரி ஓட்டு நர் இந்திரகுமார் ஆகியோர் படுகாயங்களுடன் நிகழ் விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தின் முன்பக் கம் முற்றிலும் சேதமானதால், 21 பெண்கள், 17 ஆண்கள் உட்பட 38 பயணிகள் படுகாயமடைந்தனர்.
சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
தருமபுரி, ஜூன் 7- தருமபுரி நகராட்சிப்பள்ளி அருகே கட்டப்பட்டுள்ள சுகா தார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி நகர்மன்றக் கூட்டம், நகராட்சி அலுவலக வளா கத்திலுள்ள அண்ணா கூட்டரங்கில் வெள்ளியன்று, நகர் மன்றத் தலைலர் லட்சுமி மாது தலைமையில், துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலையில் நடைபெற் றது. ஆணையர் சேகர் தீா்மானங்களை முன்மொழிந்து பேசி னார். இக்கூட்டத்தில், தருமபுரி நகரிலுள்ள அனைத்து கழிவு நீர் கால்வாய்களையும் தூர்வார வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். நகராட்சி பள்ளி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். நகரப் பகுதி களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததா ரர்கள் திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க வேண் டும். நகரில் பெருகிவரும் கொசு தொல்லையைக் கட்டுப் படுத்த அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைக்கும்போது கழிவு நீர் முறையாக வெளிவரும் வகையில் பணிகளை மேற் கொள்ள வேண்டும். நகரில் ஆங்காங்கே பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்க வேண்டும், என நகர் மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த சாலைகள் புதுப்பித்தல் மற்றும் புதிய தார்ச்சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும், ரூ.ஒரு கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள், கழிவுநீர் கால்வாய் கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பில் மேற்கொள்ள நகர்மன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது, என மொத்தம் 81 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன.