சாமான்யர்களை புறக்கணிக்கும் ஒன்றிய ரயில்வே துறை சா சாமான்யர்களை புறக்கணிக்கும்
இந்தியாவின் பொதுப் போக்குவ ரத்தில், தொலைதூரப் பயணங்க ளுக்கு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அசைக்க முடியாத நம் பிக்கை ரயில் போக்குவரத்து. குறை வான கட்டணம் மற்றும் பாதுகாப்பு அம் சங்களே இதற்கு முக்கியக் காரணம். இந்நிலையில், பொதுப்போக்கு வரத்தை பலப்படுத்த வேண்டும் என் கிற குரல் வலுவாக எழுந்து வருகிற நிலையில், ஒன்றிய பாஜக அரசு வரு வாய் ஈட்டுவதற்காக, சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை கழட்டிவிட்டு, குளிர்சாதன வசதியுட னான பெட்டிகளை இணைத்து வஞ் சகத்தை அரங்கேற்றி உள்ளது. தென்னக ரயில்வேயின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் தென்னக ரயில்வே வெளியிட்ட அறி விப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. நெல்லை, பொதிகை, சேரன், மற்றும் ப்ளூ மௌண்டைன் விரைவு ரயில்களில் உள்ள சாதாரண படுக்கை வசதியுடனான முன்பதிவு பெட்டிக ளின் எண்ணிக்கையைக் குறைத்து, அவற்றுக்குப் பதிலாக குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. நெல்லை, பொதிகை மற்றும் ப்ளூ மௌண்டைன் ரயில்களில் தலா ஒரு படுக்கை வச திப் பெட்டியும், சேரன் விரைவு ரயிலில் இரண்டு படுக்கை வசதிப் பெட்டிக ளும் குறைக்கப்பட்டு, அதே எண் ணிக்கையில் குளிர்சாதனப் பெட்டிகள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட் டது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குறைந்த கட்டணப் பெட்டிகளைக் குறைத்து, அதிக கட் டணத்துடன் கூடிய குளிர்சாதனப் பெட்டிகளைச் சேர்ப்பது கடும் கண் டனம் எழுந்தது. சு. வெங்கடேசன் எம்.பி.யின் கடும் கண்டனம் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் இந்த அறிவிப்புக் குக் கடும் கண்டனம் தெரிவித்தார். இதன் விளைவாக, நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களில் படுக்கை வசதிப் பெட்டிகள் குறைக் கப்படாது என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பை வரவேற்ற சு. வெங்கடே சன், இதேபோன்று கோவை சேரன் விரைவு ரயில் மற்றும் ப்ளூ மவுண் டன் ரயில்களிலும் படுக்கை வசதிப் பெட்டிகளை அகற்றக் கூடாது என வலி யுறுத்தியுள்ளார். தொழில் மற்றும் கல்வி நகரமா கத் திகழும் கோவைக்கு, சென்னை யிலிருந்து ஏராளமான கல்லூரி மாண வர்கள், தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் எனப் பல ரும் வந்து செல்கின்றனர். அதே போன்று கோவையிலிருந்து சென் னைக்கும் இந்த எளிய மக்கள் பயணிக் கின்றனர். கோவையிலிருந்து சென் னைக்குச் செல்லும் ரயில்களில் படுக்கை வசதியுடனான பெட்டிகள் எப் போதும் நிரம்பி வழியும். காத்திருப் போர் பட்டியலும் 50 முதல் 100 வரை நீண்டுகொண்டே இருக்கும். குறிப்பாக, கோவையிலிருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் சேரன் விரைவு ரயில் மிகப்பழமை யான ரயில்களில் ஒன்று. 1984 ஜூலை 5-ம் தேதி முதல் சேவையைத் தொடங்கிய இந்த ரயில், முதலில் காலை நேர சேவையாக இருந்தது. பின்னர், மாவட்டத்திலிருந்து இயக் கப்படும் முதல் இரவு நேர சேவை யாக மாற்றப்பட்டது. தினமும் ஏராள மான பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். சேரன் விரைவு ரயிலில் 10 படுக்கை வசதிப் பெட்டிகள் உள்ளன. ஒரு பெட்டியில் 72 பேர் பயணிக்கலாம். கோவை - சென்னை பயணச் சீட்டு கட்டணம் ரூ. 325 மட்டுமே. அதேபோன்று, மேட்டுப் பாளையத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ப்ளூ மவுண்டன் விரைவு ரயிலும் எப்போதும் முழுமையாக முன் பதிவு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுடன் இருக்கும். ஆனால், ஒன்றிய அரசின் தற் போதைய புதிய அறிவிப்பு ரயில் பய ணிகளுக்குப் பேரிடியாக வந்துள்ளது. சேரன் விரைவு ரயிலில் படுக்கை வச திப் பெட்டிகள் 10-ல் இருந்து 8 ஆக வும், ப்ளூ மவுண்டன் ரயிலில் 10-ல் இருந்து 9 ஆகவும் குறைக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பி னர் சுப்பிரமணியன் பேசுகையில், “கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சேரன் மற்றும் ப்ளூ மவுண்டன் ரயில் களில் படுக்கை வசதியுடன் கூடிய சாதாரண பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என மனு அளித்திருந்தோம். ஆனால், அதற்கு மாறாகப் பெட்டி களைக் குறைத்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது அதிர்ச்சியளிக் கிறது. சாமானிய மக்கள் பயன்படுத் தும் இந்த ரயில் பெட்டிகளைக் குறைக் கக் கூடாது. நாங்கள் கூடுதல் ரயில் பெட்டிகளைத்தான் கேட்கிறோம். ஒரு வேளை வருவாயை அதிகரிக்க குளிர் சாதன வசதியுடனான பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்றால், கூடு தலான ரயில் சேவையை ஒன்றிய அரசு தொடங்கலாம். முழுக்க முழுக்க குளிர் சாதன வசதியுடன் 10 முதல் 18 பெட்டி களுடன் இயக்கினால் அரசுக்கு வரு வாய் வரும். அதை விடுத்து ஏழை எளிய சாதாரண மக்கள் பயன்படுத் தும் பெட்டிகளைக் குறைத்து, அவர் களை குளிர்சாதன வசதியுடனான பெட்டியில் செல்ல நிர்ப்பந்தம் செய் வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலும் கல்லூரி மாணவ, மாண விகள், ஐ.டி. தொழிலாளர்கள், தின மும் பயணம் செய்யக்கூடிய நபர்க ளும் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்தத் திட் டத்தைக் கைவிட வேண்டும். பெரும் முதலாளிகளுக்கு ஆதாயம் ஏற்படுத் தும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை விடப்பட்டது. இப்போதும் சாதா ரண மக்கள் பயன்படுத்தும் பெட்டி களைக் குறைத்து, பெரும் முதலாளிக ளுக்கு ஆதாயம் ஈட்டும் வகையில் அரசு செயல்படுவது கண்டிக்கத்தக் கது” என்று தெரிவித்தார். வசதி படைத்தவர்கள் பயன்ப டுத்த அதிநவீன குளிர்சாதன வசதியு டனான பேருந்துகள், ரயில்கள், விமா னப் போக்குவரத்துகள் உள்ளன. இருப்பினும், சாதாரண மக்கள் பயன் படுத்தும் ஒரே ஒரு மலிவுக் கட்டண சேவையான ரயில் சேவையிலும் ஒன் றிய அரசு கை வைத்து, ரயில் பெட்டி களைக் குறைத்துள்ளது. “எப் போதும் போல நாங்கள் பெரும் முதலா ளிகளின் உறவுகள் தான்” என்பதை ஒன்றிய அரசு மீண்டும் ஒருமுறை ரயில் பெட்டி விவகாரத்தில் வெளிப்படுத் தியுள்ளது. - கவி