tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காலமான முரசொலி நிருபருக்கு அஞ்சலி

காலமான முரசொலி பத்திரிக்கை நிருபர் பிலால் உரு வப்படத்திற்கு, சக பத்திரிக்கையாளர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முரசொலி பத்திரிகையின் கோவை மாவட்ட நிருப ராக பணியாற்றி வந்த பிலால் உடல் நலக்குறைவு கார ணமாக அண்மையில் காலமானார். இந்நிலை யில், திங்களன்று கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த, அவரது உருவப்படத்திற்கு ஆட்சி யர் க.பவன்குமார், கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சக பத்திரிகையாளர்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத் தினர்.

இலவச வீட்டுமனை கேட்டு மனு

பவானி வட்டத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள், இல வச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்திற்குட்பட்ட ஒலக டம், கவுந்தப்பாடி, பவானி மற்றும் ஜம்பை ஆகிய பகுதி களில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு குடியிருக்கும் வீடோ அல்லது வீட்டுமனையோ சொந்தமாக இல்லை. இதனால் இஸ்லாமிய மக்கள் குறிப்பாக, பெண்கள் தங்களுக்கு இலவசமாக வீட்டு மனை வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டு திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப் பினர் ஏ.ஹாத்திம்தாய் ஆகியோர் தலைமையில் மனு  அளிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட  வருவாய் அலுவலர், சிறுபான்மை மக்களுக்கு அரசின்  செலவில் நிலத்தை வாங்கி பிரித்துக் கொடுக்கும் திட்டத் தில் நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

நிதி நிறுவனம் நடத்தி மோசடி: ஆட்சியரிடம் புகார்

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட  மக்கள் நாமக்கல் ஆட்சியரிடம் புகாரளித்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், போடி நாயக்கன்பட்டி, கெஜகொம்பிகை பகுதியைச் சேர்ந்த  சரவணன் - ரம்யா தம்பதியினர், பல வருடங்களாக டிரான் சிட்டி பெனிபிட் பண்ட் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறு வனத்தை நடத்தி வருகின்றனர். இதில் தொடர் வைப்புத் தொகை, வைப்புத் தொகை சேமிப்பு கணக்கு போன்ற  பல திட்டங்களில் பொதுமக்களிடமிருந்து தொகையை  பெற்று இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். அதில் அதிக மான வட்டியும், 60 மாதங்கள் கழித்து செய்யும் டெபாசிட் களுக்கு முழுத்தொகையும் திருப்பித் தருவதாகவும் பல  ஆசை வார்த்தைகளைக்கூறி 200க்கும் மேற்பட்ட ஏழை,  எளிய மக்களிடம் ரூ.4 கோடிக்கு மேல் பணத்தை பெற்று  ஏமாற்றியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து,  எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண் டும், என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள், திங்களன்று  மாவட்ட ஆட்சியர் ச.உமாவிடம் புகாரளித்தனர்.

அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்து மிரட்டல் 6 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

சேலம், ஏப்.21- அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்து மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என  வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு, 6  குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவத் தால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள  தும்பிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (30). இவர் தனது நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகளுடன் சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண் ணெண்ணெயை எடுத்து குழந்தைகள் மீதும், தன் மீதும்  ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட  பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், தடுத்து நிறுத்தி  தண்ணீர் ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சத்யா கூறுகையில், எனது கணவர் மாரி முத்து உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் உள்ளார். அரசு  சார்பில் எங்களுக்கு 2 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. அதில் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்கள் பகுதி யைச் சேர்ந்த சிலர், சாதி பெயரை சொல்லி திட்டி கொலை  மிரட்டல் விடுத்தும், நிலத்தை அபகரிக்க முயற்சித்தும் வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார ளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,  சாதிப்பெயரை கூறி நிலத்தை அபகரித்து மிரட்டல் விடும்  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.  இதுகுறித்து நகர காவல் துறையினர் தொடர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.