tamilnadu

img

டிஆர்இயு சேலம் கோட்ட அலுவலகம் திறப்பு

டிஆர்இயு சேலம் கோட்ட அலுவலகம் திறப்பு

சேலம், மே 7- டிஆர்இயு சேலம் கோட்ட அலுவல கம் திறப்பு விழா புதனன்று நடைபெற் றது. தட்சிண ரயில்வே எம்பிளாய்ஸ் யூனியன் (டிஆர்இயு) – சேலம் கோட்ட  அலுவலக திறப்பு விழா மற்றும் தொழிற் சங்க செயல் தலைவர் டி.ஜானகிராமன் பணி ஓய்வு பாராட்டு விழா புதனன்று நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் நடை பெற்ற இந்நிகழ்விற்கு, டிஆர்இயு கோட் டச் செயலாளர் எம்.முருகேசன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர்  சி.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். ரயில்வே தொழிற்சங்க அலுவலகத்தை செயல் தலைவர் ஜானகிராமன் திறந்து  வைத்தார். இதையடுத்து பணி ஓய்வு  பாராட்டு விழாவில் டிஆர்இயு துணை  பொதுச்செயலாளர் கே.பிஜு, சிஐடியு  மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், மாவட்டப் பொருளாளர் வி.இளங்கோ, ரயில்வே தொழிற்சங்க தலைவர்கள் எஸ்.சாம்பசிவன், சி.முரு கேசன், ரயில் ஓட்டுநர் சங்க நிர்வாகி அருண்குமார், அஞ்சல் ஆர்எம்எஸ் சங்க நிர்வாகி கே.ஆர்.கணேசன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி வில், கோட்டப் பொருளாளர் கே.குமரே சன் நன்றி கூறினார்.