tamilnadu

img

மோகன் பகவத் வருகையால் போக்குவரத்து நெரிசல்

மோகன் பகவத் வருகையால் போக்குவரத்து நெரிசல்

கோவை, மே 9 – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகையால் கோவை மாநகரத்தின் பிர தான சாலை கடும் நெரிசலுக்குள்ளாகி யது. இந்த போக்குவரத்து நெரிசலை, செய்தி யாளர் ஒருவர்   செல்போனை போலீசார் பிடுங்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட் டில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்க மோகன் பகவத் கடந்த 6 ஆம் தேதி திருச் செங்கோடு வந்திருந்தார். பின்னர் வெள்ளி யன்று தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவை விமான நிலையம் வழி யாக ஹைதராபாத் புறப்பட்டார். இவர், கோவை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் புறப்படுவதற்காக வந்த போது, அவிநாசி சாலையில் கணியூர் சுங்கச் சாவடி அருகே ஆயிரக்கணக்கான வாகனங் கள் அரை மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப் பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இதனால் காலை பணிக்குச் சென்றோர், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள், கடும் வெயிலிலும் அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்வின்போது, போக்குவரத்து நெரிசலை பதிவு செய்ய முயன்ற தனியார் டிஜிட்டல் ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் தனது செல்போனில் காட்சிகளை படம் பிடித் தார். அப்போது, ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் செல்போனை பிடுங்க முயன்றது அதிர்ச் சியை ஏற்படுத்தியது. காலை நேரத்தில் ஏற் பட்ட இந்த சம்பவம், வாகன ஓட்டிகளை  புலம்ப வைத்ததுடன், பொதுமக்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியது.