ஏடிஎம்கள் செயல்படாததால் சுற்றுலாப் பயணிகள் அவதி
கோவை, ஜூன் 8- வால்பாறையில் உள்ள ஏடிஎம்கள் செயல்படாததால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்குள் ளாகினர். கோவை மாவட்டம், வால்பாறை தமிழ் நாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலங்க ளில் ஒன்றாகும். இங்கு வெளி மாவட்டம் மற் றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்கின்றனர். 50 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் வால்பாறை யில் பிரதான தொழிலாக தேயிலை எஸ் டேட் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் சம்பளம் உள் ளிட்ட பண தேவைகளுக்கு தமது வங்கி கணக் கிலிருந்து பணம் எடுப்பதற்கு வால்பாறை யில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். வால்பாறை யில் எஸ்பிஐ, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட மூன்று ஏடிஎம் மையங்கள் உள்ளன. அந்த மூன்று ஏடிஎம் மையங்களும் ஞாயிறன்று செயல்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். எஸ்பிஐ- யின் மொபைல் ஏடிஎம் வாகனம் மட்டுமே செயல் பட்டது. அங்கும் கூட்டம் அதிகமாக இருந் தது. இதுசம்பந்தமாக பலமுறை கோரிக்கை வைத்தும், பொதுமக்கள் சிரமத்திற்குள் ளாவது தொடர்கிறது. வங்கி நிர்வாகங்கள் உடனடியாக செயல்படாத ஏடிஎம்-களை சரி செய்ய வேண்டும், என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.