tamilnadu

img

திரையரங்குகளைத் திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி:
தமிழகத்தில் தற்போதைய நிலையில் திரையரங்குகள் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

புதனன்று (ஜூலை 22) கோவில் பட்டியில் செய்தியாளர்களிடம்  அவர் பேசுகையில்,திரையரங்குகளைத் திறக்க தற்சமயம் சாத்தியக்கூறு இல்லை. வெளிநாட்டில் திரையங்குகள் திறக்கப்பட்டு, ஒரு வரிசைக்கு 2 பேர் அமர்ந்து படம் பார்க்கின்றனர். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபமாக இருக்காது. திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவெடுப்பார்” என்றார். திருநெல்வேலி மாவட்டம் “கயத்தாறு விமான நிலையம் 2-ம் உலகப் போரின் போது அமைக்கப்பட்ட தரமான விமான நிலையம். அந்த விமான நிலையத்தை இந்திய விமான படை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துள்ளனர். அதனை கையகப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அங்கு விரைவில் விமான தளம் வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என்றார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் மின் கட்டணம் செலுத்துவதில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு தாமாக முன் வந்து அறிவித்தது. அதில், எந்தவித தவறும் நடக்கவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜூ கூறினார்.மின் அளவீட்டில் ஏதேனும் குளறுபடி நடந்திருந்தால், அடுத்த கணக்கீட்டில் அது சரி செய்துகொள்ளப்படும் என்ற உத்தரவாதத்தையும் அரசு தெரிவித்திருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

;