tamilnadu

img

தீக்கதிர் முப்பெரும் விழா : கோவையில் கோலாகலம்

சிறப்பு மலரை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட பி.ஆர்.நடராஜன் எம்.பி., பெற்றுக் கொண்டார்

கோயம்புத்தூர், செப். 27 - ஊடக உலகின் உண்மையின் பேரொளியாம் தீக்கதிர் நாளிதழின் 60ஆம் ஆண்டு வைரவிழாவின் ஒரு பகுதி யாக கோவையில் செவ்வாயன்று  வைரவிழா, சிறப்பு மலர்  வெளியீடு, சந்தா வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடைபெற்றது. கோவை எஸ்.என்.ஆர்.கலையரங்கில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  வைரவிழா மலரை வெளியிட்டு விழாப்பேருரையாற்றினார்.  மலரை பி.ஆர்.நடராஜன் எம்.பி., பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில், மார்க்சிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், சு.வெங்கடேசன் எம்.பி., கே.பாலபாரதி, பிரண்ட் லைன் ஏட்டின் முன்னாள் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், மூத்த  பத்திரிகை யாளரும், தீக்கதிர் முன்னாள் இணை ஆசிரியருமான சு.பொ.அகத்தியலிங்கம், தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தீக்கதிர் பொறுப்பாசிரியர்கள் எம்.கண்ணன், எஸ்.பி.ராஜேந்திரன், சிபிஎம்  கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா,  மேலாளர்கள் எஸ்.ஏ.மாணிக்கம், ஜோ.ராஜ் மோகன், சி.கல்யாணசுந்தரம், ஜே.ஜெயபால், மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர்,  ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

தீக்கதிர் வைரவிழா நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்த னர்.

;