உடுமலை, மடத்துக்குளம் மக்களின் பாதுகாவலன் செங்கொடி!
உடுமலை மற்றும் மடத்துக்குளம் மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
அரசு நில மீட்புப் போராட்டம்
உடுமலை அரசு மருத்துவமனை எதிரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் வசதிபடைத்தவர்கள் மதுக்கூடமாக பயன்படுத்தி வரும் ஒரு ஏக்கர் அரசு நிலத்தை மருத்துவமனை விரிவாக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண போராட்டம்
உடுமலை அரசு மருத்துவமனை எதிரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் வசதிபடைத்தவர்கள் மதுக்கூடமாக பயன்படுத்தி வரும் ஒரு ஏக்கர் அரசு நிலத்தை மருத்துவமனை விரிவாக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
பொது போக்குவரத்து பிரச்சனை
தரமான பேருந்துகளை இயக்காமல், கிலோ மீட்டருக்கு ஒரு பயணிகள் நிழற்குடை கட்டும் அரசின் வினோத போக்கை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்துச் செல்கிறது செங்கொடி இயக்கம். !
மலைவாழ் மக்களின் வாழ்வாதார போராட்டம்
மலைவாழ் மக்களின் வாழ்வாதார கோரிக்கையான மலையடிவாரத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்ல பாதை அமைத்து தர உடுமலையில் நான்கு நாட்கள் வனத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி, திருமூர்த்தி மலை முதல் குருமலை வரை பாதை அமைக்க வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது செங்கொடி இயக்கத்தின் போராட்டத்தின் மைல்கல்லாக உள்ளது
அகில இந்திய மாநாடு
இந்திய நாட்டை மத வெறியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டுமே பார்க்கும் ஒன்றிய மோடி அரசை அகற்றவும், மக்களின் நலனை காக்கவும் களத்தில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-6 மதுரையில் நடைபெற உள்ளது.உள்ளது