tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

எரிந்த நிலையில் ஆசிரியர் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை

கோவை, மார்ச் 19 - கோவை மாவட்டம் நாச்சிபாளையம் அருகே அரசு பள்ளி  ஆசிரியை ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கரை அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜனின் மனைவி பத்மா (53). இவர் வழுக்குப்பாறை அரசு  பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவ ருக்கு ராஜராஜேஸ்வரி என்ற மகளும், லட்சுமி நாரா யணன் என்ற கல்லூரி மாணவனும் உள்ளனர். செவ்வா யன்று, காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற பத்மா,  மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு நீண்ட நேரமாகியும்  அவர் வராததால், அவரது குடும்பத்தினர் மதுக்கரை காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த னர். இந்நிலையில், நாச்சிபாளையம் வழுக்குப்பாறை சாலை யில் உள்ள ஓடை அருகே காலி இடத்தில் பெண் ஒருவர் எரிந்த  நிலையில் சடலமாக கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தக வல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீ சார், சடலமாக கிடந்தது ஆசிரியை பத்மா என்பதை உறுதி  செய்தனர். மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற் கொண்ட போலீசார், தடயவியல் துறையினர் மூலம் தடயங் களை சேகரித்தனர். பின்னர், பத்மாவின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனும் சம்பவ  இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற் படுத்தியுள்ளது.

இளைஞர் தற்கொலை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் நாமக்கல்

, மார்ச் 19- இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால்,  இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவ ரது உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி, தளிகை அருகே உள்ள தட்டாதபாளையத்தைச் சேர்ந்தவர் மணி கண்டன் (23). இவர் செவ்வாயன்று இரவு வேலகவுண்டம் பட்டியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இதனி டையே, இரவு ரோந்துப் பணியில் இருந்த வேலகவுண் டம்பட்டி காவல் துறையினர் அவ்வழியாக வந்த மணி கண்டனை வண்டியை நிறுத்தச் சொல்லி பரிசோதனை செய்த  போது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்ததாக  கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டன் மீது காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்து அடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரது இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச்  சென்றுள்ளனர். இதன்பின் மணிகண்டன் உறவினரை வர வழைத்து, அவருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஏற் பட்ட மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் புதனன்று  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊர் பொது மக்கள் விசாரித்த போது, காவல் துறையினர் தாக்கியதால்,  மணிகண்டன் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை  செய்து கொண்டார் என தெரியவந்தது. இதனால் ஆவேச மடைந்த அவரது உறவினர்கள் வேலகவுண்டம்பட்டி காவல்  நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிகண்டன் உடலை போலீசார் மீட்டு நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களிடையே போலீ சார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்! பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை நாமக்கல்

, மார்ச் 19- சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,  என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்  கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், சைபர் குற்றம்  தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி புதனன்று நாமக்கல்  பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து துவங்கி யது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்  கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை, மோகனூர் சாலை, டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, மணிக்கூண்டு வழி யாக மீண்டும் மோகனூர் சாலை சென்று பழைய அரசு மருத்து வமனை வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. இப்பேரணி யில் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். இதன்பின் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்  கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சைபர் குற்றங் கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சைபர்  குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளை கண்டறிந்து பணத்தை  மீட்பது சவாலாக உள்ளது. எனவே பொதுமக்கள் சைபர் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வு பெற வேண்டும். ஆன்லைன் டிரேடிங், திட்டங்களில் முதலீடு, இரட்டை பணம், டாஸ்கை எதிர்கொள்ளுதல், உள்ளிட்ட பல் வேறு சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற வழி களில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண் ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்தால் உடனடி யாக இழந்த பணம் அல்லது பொருளை பிளாக் செய்து நிறுத்தி வைக்க முடியும், என்றார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் இது வரை 500 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. அதாவது, நாளொன்றுக்கு 5 சைபர் குற்றங்கள் தொடர் பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தங்கி இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் இணைய தளத்தில் பதிவு செய்வது குறித்து தொழிலாளர் நலத்துறை  மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார். இந்நிகழ்ச்சி யில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே. செல்வராஜ், காவல் ஆய்வாளர் எஸ்.கைலாசம், உதவி காவல் ஆய்வாளர் சிவகுமார், கல்லூரி மாணவர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.