tamilnadu

கோடை கால சிறப்பு மலை ரயில் சேவை

கோடை கால சிறப்பு மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையத்தில் இருந்து உத கைக்கு கோடை கால சிறப்பு மலை ரயில் இயக்கம் துவங்கி உள்ள நிலையில், சுற்று லாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் இருந்து உதகைக்கு தினசரி நீலகிரி மலை  ரயில் இயக்கப்பட்டு வருகிறது..யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டு பழமையான இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்ய வருவது வழக்கம். ஒவ் வொரு ஆண்டும் கோடை கால விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவது வழக் கம். அதன்படி இவ்வாண்டு கோடை கால விடுமுறை நாட்களில் மேட்டுப்பாளையம் முதல் உதகை மற்றும் உதகை முதல் மேட் டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் மார்ச் மாதம் 28 முதல் ஜூலை 6 வரை இயக் கப்படும் என்றும் வாரத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை என இரு நாட் கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.. இதன்படி வெள்ளியன்று சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை  9.10 புறப்பட்டு சென்றது இந்த சிறப்பு ரயில் மதியம் 2.25 மணிக்கு உதகை சென்றடைந்தது. அதேபோல் உதகையிலிருந்து மேட்டுப்பா ளையம் வரை வாரத்தில் சனிக்கிழமை மற் றும் திங்கள் கிழமைகளில் காலை 11.25 உதகையிலிருந்து புறப்பட்டு மாலை 4.20  மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலை யம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. சிறப்பு மலை ரயிலில் பள்ளி மாணவர் கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் உற்சா கத்துடன் பயணித்து மகிழ்ந்தனர்.