tamilnadu

img

நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை

நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை

ல்வி பயத்தில், மன உளைச் சலுக்குள்ளான மாணவி தற் கொலை செய்து கொண்ட சம்ப வம் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி, பெரிய முத்தியம் பட்டியைச் சேர்ந்த செல்வராசு – சந்தரா தம்பதியின் மகள் சத்தியா (18). இவர் கொங் கணாபுரத்திலுள்ள (ஏஜிஎன்) தனியார் பள்ளி யில் கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு முடித்து, உடனே நடைபெற்ற நீட் தேர்வில் 333 மதிப் பெண் பெற்றார். ஆனால், மருத்துவப்படிப் பிற்கு சேர முடியாததால் ஜலகண்டாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து, படித்து வந்தார். கடந்த வாரம் சத்யா தனது தாயார் சந்திராவிடம் நீட் தேர்வுக்கு படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும், மருத்துவப்படிப்பில் சேர முடியுமா? முடியாதா? என்ற பயம் ஏற்பட் டுள்ளதாக தெரிவித்துள்ளார். உடனடியாக தாய், தந்தை இருவரும் படிக்க முடிய வில்லை என்றால் வேறு ஏதேனும் படிப்பை தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறியுள்ளனர்.  ஆனாலும், மன உளைச்சலுக் குள்ளான மாணவி சத்தியா கடந்த மார்ச் 31 ஆம் தேதியன்று இரவு விஷம் அருந்தியுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை எடப்பாடி தனி யார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த சத்தியா பின்னர் மேல் சிகிச் சைக்காக சேலத்திலுள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலை யில் வியாழனன்று சிகிச்சை பலனின்றி சத் தியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொங்கணா புரம் போலீசார் சத்தியாவின் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சத்தியாவின் பெற்றோர் கூறுகையில், மருத் துவப்படிப்பு கிடைக்கவில்லை என்றால், வேறு எத்தனையோ படிப்புகள் உள்ளது. தனது மகளை போல எந்த மாணவ, மாணவி களும் இது போன்ற தற்கொலை முயற்சி யில் ஈடுபடக்கூடாது, கண்ணீர் மல்க தெரி வித்தனர். இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.