கோவை, நவ. 11 - கல்வி உதவித்தொகை கிடைக்காததால் உயிரிழந்த மாணவி ஐஸ்வர்யாவின் மர ணத்திற்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுதில்லி எல்.எஸ்.ஆர்.கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு பயின்று வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த ஐஸ் வர்யா என்ற மாணவி கல்வி உதவித்தொகை கிடைக்காததன் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலை யில், ஐஸ்வர்யாவின் மரணத்திற்கு நீதி கோரியும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள அனைத்து கல்வி உதவி தொகைகளும் உடனே வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்திபுரம் பெரியார் சிலை முன்பு சங்கத் தின் மாவட்டத் தலைவர் அசாருதீன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, மாவட்ட துணைத் தலைவர் கயல்விழி, மாவட்ட துணை செயலாளர் சந்தியா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனம் முழங்கினர்.