தொழில்நுட்ப பயிற்சி மாணவர்களுக்கு கழிவறை வேலை அரசு போக்குவரத்து மேலாளரின் செயலால் அதிர்ச்சி
கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் உக்கடம் 1 கிளையில் தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த மாணவர்களை, சம்பந்தமே இல் லாத கழிவறை வேலைகளில் ஈடு படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு போக்குவரத்து கழகத் தின் உக்கடம் 1 பணிமனையில், ஐடிஐ கல்வியை முடித்த 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில் நுட்ப பயிற்சிக்காக சேர்ந்துள்ளனர். குறைந்தபட்ச ஊதியம் பெற்று, பேருந்துகளின் பழுது நீக்கம், உதி ரிப் பாகங்கள் பராமரிப்பு, இன்ஜின் பழுது கண்டறிதல் ஆகிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில், பயிற் சிக்கு வந்த மாணவர்கள் இருவர் கழிவறைகளை பெயிண்ட் அடிக் கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தற்கான வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகியுள்ளது. இதனை கிளை மேலாளர் மணிவண்ணனின் கட்டாயத்தால் மேற்கொள்ள வேண் டிய நிலை ஏற்பட்டதாக தெரிகி றது. இச்சம்பவம் தொழிற்சங்கங்க ளிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக சிஐடியு உள்ளிட்ட முன்னணி தொழிற்சங் கங்கள், தொழில்நுட்ப மாணவர் களை இழிவுபடுத்தும் வகையி லான இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளனர். சர்ச்சைக்கு பெயர் போன கிளை மேலாளர் போக்குவரத்து கழக ஊழியர் கள் கூறுகையில், மணிவண்ணன் இதற்கு முன் ஒண்டிப்புதூர் கிளை யில் பணியாற்றிய போது தொழி லாளர்களுக்கு எதிரான நடவ டிக்கை தொடர்ந்து ஈடுபட்டார். தனக்கு தேவையானவர்களுக்கு வேலை கொடுப்பதும், மற்றவர் களை காத்திருக்கவைப்பது, விடு முறை அளிப்பது உள்ளிட்ட நடவ டிக்கைகளால் போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த பணிமனை யில் போராட்டங்களை முன்னெ டுத்தனர். இதனையடுத்து அவர் உக்கடம் கிளைக்கு மாற்றப்பட்டி ருந்தார். ஆனால் இங்கு வந்து ஒரு வாரத்திலேயே மீண்டும் அத்து மீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணி நீக்கம் செய்யக் கோரிக்கை மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் வகையில், தொழில் நுட்ப பயிற்சியாளர்களுக்கு அசிங் கமான வேலைகளை கட்டாயமாக வழங்கும் மனப்பான்மையுடன் செயல்படும் கிளை மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். “ஐடிஐ மாணவர்கள் அரசு பணிக்காக மிகுந்த முயற்சி யுடன் பயிற்சி பெற்று வருகின்ற னர். அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வகையில் கழிவறை யில் பணி செய்ய வைத்தது வன்மை யான கண்டனத்திற்குரியது. உட னடியாக இவர் மீது போக்குவரத்து கழக நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லையெனில், போராட் டத்தில் ஈடுபடுவோம் என தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சமூகத்தில் சமத்துவம், மாண வர்களின் உரிமை, தொழிலாளி மரி யாதை ஆகியவை பல்லாயிரக்க ணக்கான போராட்டங்களால் கிடைத் தவை. இந்நிலையில், ஒரு கிளை மேலாளர் தனது அதிகாரத்தை தவ றாக பயன்படுத்தி, தொழில்நுட்ப பயிற்சியாளர்களின் நம்பிக்கையை சிதைக்க முயற்சிப்பது கண்டிக்கத் தக்கது. அதிகாரிகள் இந்த விடயத் தில் உரிய நடவடிக்கை எடுத்து, இனி இவ்வாறு யாரும் மாணவர்க ளின் உழைப்பை இழிவுபடுத்தாத படி உறுதி செய்ய வேண்டும் என் பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.