tamilnadu

img

ஆரணி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை: கிராம மக்கள் எதிர்ப்பு

ஆரணி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை: கிராம மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை,மே 20- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள அய்யம்பாளையம் மற்றும் வண்ணான்குளம்  2 கிராமங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி நகருக்கு அருகி லுள்ள அய்யம்பாளையம், வண்ணார் குளம் கிராமங்கள்  இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். விவசாயம் மற்றும் நெசவுத் தொழிலை நம்பி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.  இந்நிலையில் அய்யம் பாளையம் பகுதியில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. இதற்காக விவ சாயிகளிடமிருந்து வரு வாய்த்துறையினர் நிலத்தை கையகப்படுத்தி அளவீடு செய்து வருகின்றனர்.  இந்தப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்கள் உண்டாகும் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், விவசாய நிலப் பகுதிகளில் ஒன்று திரண்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தின் போது, மண்ணெண்ணெய் ஊற்றி பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பதட்டம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்ட னர். பின்னர், சம்பவ இட த்திற்கு வந்த ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, கிராம மக்கள் கோரிக்கை குறித்து  அரசு அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பிறகு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.