tamilnadu

உதகை பூங்காவில் விதை சேகரிக்கும் பணி துவக்கம்

உதகை பூங்காவில் விதை சேகரிக்கும் பணி துவக்கம்

உதகை, ஜூன் 10- உதகை தாவரவியல் பூங்காவில் 2  ஆவது சீசனுக்கான நாற்று உற்பத்திக் காக மலர் செடிகளில் இருந்து விதை கள் சேகரிக்கும் பணிகள் நடந்து வரு கிறது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடி கள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டது. மேலும், 25 ஆயி ரம் பூந்தொட்டிகளில் செடிகள் நடப்பட் டன. இந்நிலையில், கோடை சீசனுக் காக நடவு செய்த செடிகளில் மலர் கள் காய்ந்துள்ளதால், பூங்காவில் 2  ஆவது சீசனுக்கு மலர் நாற்றுகள் உற் பத்தி செய்வதற்காக செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது. பணியாளர்கள் காய்ந்த மலர்களில் இருந்து விதை களை சேகரித்து வருகின்றனர். சால் வியா, மேரிகோல்டு, பென்ஸ்டிமன், டெல்பீனியம், ஆஸ்டர், ஜீனியா உள் ளிட்ட மலர் செடிகளில் இருந்து விதை கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பின்னர்  அந்த விதைகளை பணியாளர்கள் தரம்  பிரித்து காய வைக்கின்றனர். தொடர்ந்து தரமான விதைகள் நர்சரியில் விதைத்து பராமரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்கள் வளர்ந்த பின்னர் நடைபாதை ஓரங்கள் உட்பட பல் வேறு பகுதிகளில் நாற்றுகள் நடவு செய் யப்பட உள்ளது.  மேலும் பூங்காவுக்கு வருகை தரும்  சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்ய விதைகள் தரம் பிரித்து பேக் கிங் செய்யப்படுகிறது.