கொளுத்தும் வெயில்: தண்ணீர் தேவை அதிகரிப்பு!
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பேக்கரி, டீக் கடைகளில் குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுகிறது. கடந்த சில வரு டங்களுக்கு முன்பு வரை ஏப்ரல் மாத இறுதியில் தான் வெயில் அதிகரித்து காணப் படும். ஆனால், தற்போது பிப்ரவரி மாத இறுதியி லேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்குகிறது. இதன் காரணமாக பொது மக்கள் வெயிலிலிருந்து தங்களை தற்காத் துக் கொள்வதற்காக உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் இயற்கை பானங்கள் பல வகை களை விரும்பி வாங்குவது வழக்கம். மேலும், கோடை காலங்களில் சராசரியாக ஒரு நபர் 5 லிட்டர் தண்ணீர் வரை பருக வேண்டும் என மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத் தப்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு செல் லும் பொதுமக்கள் கைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களுடன் செல்வது அதிக ரித்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் லில் கோடை வெயிலின் தாக்கத்தின் கார ணமாக உணவகங்கள், பேக்கரி, டீக்கடை களில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பள்ளிபாளையம் - சங்க கிரி சாலையில் பேக்கரி கடை நடத்தி வரும் சிவம் என்பவர் கூறுகையில், சராசரியாக ஒரு நாளைக்கு 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டில் கேன் 25 கேன்கள் வரை எங்களுக்கு தேவைப்படும். தற்போது கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவு நீரை பருகுவதாலும், தொலைதூரப் பயணங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் நபர்களும் தங்களுக்கு தேவையான குடிநீரை எங் கள் கடைகளில் இருந்து பெற்று செல்வதா லும் கணிசமாக தண்ணீர் தேவை அதிக ரித்துள்ளது. ஒரு நாளைக்கு 25 பாட்டில் குடிநீர் கேன் கள் வாங்கிய நிலையில் தற்போது அது கணிச மாக அதிகரித்து 35 முதல் 38 குடிநீர் பாட்டில் கள் வரை வாங்கி வருகிறோம். தண்ணீர் தேவை அதிகரித்தாலும் வெயில் தாக்கத்தின் காரணமாக டீ, காபி பருகுவோர் எண் ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதால் வியா பாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத் தில் குளிர்பானங்கள் வாங்குவதிலும், பழம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார்.