tamilnadu

img

சசிகலா விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: முதல்வர்

கோவை:
சசிகலா விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதல்வர்எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் புதனன்று முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு.அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே 7.5 சதவீதஉள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டுஅரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.சசிகலா விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.