ஆனைக்கட்டியில் யானை தாக்கியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த விமல் ஸ்ரீ என்ற பறவைகள் ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் அருகே ஆனைக்கட்டியில் ஒன்றிய அரசின் சலீம் பறவைகள் ஆராய்ச்சி மையம் உள்ளது, இந்த மையத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த விமல் ஸ்ரீ (23) என்பவர் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். நண்பர்களுடன் வெளியே செல்லும் போது எதிர்பாராத விதமாகக் காட்டுயானை தாக்கியதில் பலத்த காயமடைந்த விமல் மார்பெலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.