படகு சவாரிக்கு மீண்டும் ஏற்பாடு செய்யக் கோரிக்கை
கோவை, ஜூன் 8- வால்பாறையிலுள்ள படகு இல்லத்தை பராமரிப்பு செய்து, மீண்டும் படகு சவா ரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறைக்கு, தமிழ்நாடு மற்றுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்று லாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்று லாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், வால்பாறை அரசு கலைக்கல்லூரி பின்பு றம் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் அம்மா படகு இல்லம் 2023 ஆம் ஆண்டு திறக்கப்பட் டது. கோடை விழாவை முன்னிட்டு பயன் பாட்டுக்கு கொண்டு வந்த படகு இல்லத்தால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தற்போது ஏமாற்றமளிக்கும் வகை யில் சில ஆண்டுகளிலேயே பராமரிப் புப் பணிகள் செய்யாமல் முடக்கி வைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான உதகமண்டலம், கொடைக்கா னல் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணி களை மகிழ்விக்க படகு சவாரி நடத்தப்படு கிறது. அதேபோல் வால்பாறையிலும் படகு சவாரி தொடங்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அதனை ஏற்று தமிழக அரசால் படகு இல்லம் அமைக்கப்பட்டது. இந்த படகு இல்லத்தை தொடர்ந்து அக்கறை எடுத்து பராமரிக்காததால் தற்போது பொது மக்களின் பயன்பாடு இல்லாமல் முடங் கியுள்ளது. படகு இல்லம் திறக்கப்பட்டு 15 கால்மிதி படகு, 2 துடுப்பு படகு என மொத்தம் 17 படகுகள் இயக்கப்பட்டன. தற்போது அனைத்து படகுகளும் முடக்கி வைக்கப் பட்டுள்ளது வேதனை தருகிறது. அரசு துரித நடவடிக்கை எடுத்து மீண்டும் படகு இல் லத்தை பராமரிப்பு செய்து படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வால்பாறையின் சுற்றுலா வளர்ச்சிக்கு அது பேருதவியாக இருக்கும், என்றனர்.