tamilnadu

img

மானிய விலையில் நெல் நடவு இயந்திரங்கள் வழங்கக் கோரிக்கை

மானிய விலையில் நெல் நடவு இயந்திரங்கள் வழங்கக் கோரிக்கை

கோபி, ஜூன் 29- ஆட்கள் பற்றாக் குறையை சமாளிக்க, நெல் நடவு இயந்திரங் களை மானிய விலையில் வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி பாசனமான தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில், கடந்த மாதம் குறுவை  சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 20 ஆயிரம் ஏக்கர்  பரப்பளவில் நெல் சாகுபடி செய் வதற்காக விவசாயிகள் நாற்றாங்கால் அமைத்து உழவுப்பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். இதில் இயந்திரம் மூலமாகவும், ஆட்கள் மூலமாகவும் நடவுப்பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்  நடவுப்பணிகளில் இயந்திரம் மூலம் நடவு செய்ய குறிப்பிட்ட சில இயந் திரங்கள் மட்டுமே உள்ள நிலை யில், நாற்றாங்கால் அமைத்த 30  நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும் என்பதால், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதியில் நடவு செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு நடவுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இயந்திரம் மூலம் நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் செலவாகிறது. குறித்த நாட்களில் நடவு செய்ய வேண்டும் என்பதற்காக வெளியூரிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு, நாளொன்றுக்கு 20 ஆட்கள் 4 ஏக்கர் வரை நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில இயந்திரங்கள் மட்டுமே உள்ளதால், ஆட்கள் பற்றாகுறையை சமாளிக்க அரசு விவசாயிகளுக்கு நெல் நடவு இயந்திரங்களை அதிகளவில் மானிய விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.