tamilnadu

img

ஆங்கிலேயர் காலத்து பாலத்தில் சீரமைப்பு பணி

ஆங்கிலேயர் காலத்து பாலத்தில் சீரமைப்பு பணி

குமாரபாளையம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பவானி செல்லும் காவிரி ஆற்றின் பழைய பாலம் மிகவும் பழுதாகி காணப்பட் டது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இப் பாலத்தின் பக்கவாட்டு சுவர், கைப்பிடி சுவர் ஆகியவற்றில் விரிசல் விழுந்து, சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் பல ஆண்டுகளாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆட்டோ, கார் ஆகியவற்றிற்கு மட்டும் அனுமதி வழங் கப்படுகிறது. பாலம் சேதமடைந்து இருக் கும் நிலையில் தற்போது இப்பாலத்தின் வழியே செல்வது ஆபத்தாக உள்ளது. எந்நே ரமும் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள் ளதால், பாலத்தை பராமரிப்பு செய்ய வேண் டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று தற்போது, பாலத்தில் சீரமைப்பு பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.